ஆசிரியர் குறிப்பு:

சென்னையில் வசிக்கும் இவர் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். தம்மம் தந்தவன் எனும் நாவல் இவரது மொழிபெயர்ப்பு. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது.

விடிவு கதைக்கருவில் பல கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் இவர் இதைச் சொல்லியவிதம் புதிது. நிஜவாழ்க்கையிலும் கூட கணவன் மனைவி அல்லாத இருவர் வெளியூர் செல்கிறார்கள். ஒன்றும் நடக்காதவரை ஒன்றுமில்லை. ஒருவர் இறந்தால் மற்றவர் என்ன செய்வது? இருவரின் வீட்டாரை எப்படி எதிர்கொள்வது! விளையாட்டுக்கள் வினையாவது இப்படித்தான். முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை பதற்றத்தை சிறிதும் குறைக்காமல் கொண்டு செல்லும் கதைசொல்லல்.

விடிவு மட்டுமல்ல பழனி, ஆர்வலர் கதைகளும் சொல்லிய விதத்தாலேயே நல்ல கதையாகி இருக்கிறது. சம்பவங்களையே பெரும்பாலும் இவர் கதைகளாக்கி இருக்கிறார். சம்பவங்களை கேட்பவர் இமைக்காமல் கேட்பது போல் சொல்லும் சரளமான மொழிநடை இவருக்கு.

திருவண்ணாமலையின் மறுபெயர் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். முழுக்கவே பகடியான கதை. வண்ணநிலவனின் மழைப்பயணமும் பூதம் கதையும் சொல்லும் விசயம் ஒன்றே ஆனால் சொல்லப்படும் விதத்தில் எவ்வளவு வித்தியாசங்கள்? கடைசிப்பத்தி புன்னகையை ஏற்படுத்துகிறது.

பழனி, ஸ்ரீஜி, பாபு எல்லோருமே முன்னேறினால் போதும், End justifies the means என்ற வகையில் இயங்குகிறார்கள். தார்மீக நெறிகளில் இவர்களுக்கு கவலையில்லை. இருதயம் அண்ணன் கூட வைத்துக்கொண்டே வஞ்சகம் பண்ணுகிறார். அப்பாவி என்றால் ஆள்தலும் அளத்தலும் கதையில் வரும் பெயரில்லாத கதைசொல்லி தான்.

பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. நான்கு வருடங்களுக்கு பத்து கதைகள் என்னும் போது குறைவாகவே எழுதியிருக்கிறார். கரி கதையின் முடிவில் நாடகத்தன்மை இருக்கிறது, மதிப்பு கதையில் ஐநூறு ஆயிரம் வெறும் காகிதம் என்று பொதுவாக எல்லோருக்கும் உள்ள பிரமை இவருக்கும் இருந்திருக்கிறது. இவை இரண்டையும் விட்டுப்பார்த்தால் கதைகள் எல்லாமே வித்தியாசமான கதைக்களங்களில் தனித்துவமான கதைசொல்லல். சற்றே அசோகமித்ரனின் சாயல் இருந்தபோதிலும் இவரிடம் ஒரு Unique writing style இருக்கிறது.

ஆள்தலும் அளத்தலும் போன்ற கதைகள் இவர் இரண்டு கைகளையும் தாராளமாக வீசி நடைபயிலும் களம். O .Henryயின் பாணியில் கதை இறுதியில் திருப்பம் என்பதில் இவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பத்து கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் வித்தியாசமாக எழுதப்பட்டவை. மிகுந்த மனநிறைவை அளிக்கும் தொகுப்பு. இவர் தொடர்ந்து எழுத வேண்டும். மிகவும் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்.

பிரதிக்கு:

பதாகை & யாவரும் வெளியீடு
90424 61472 & 98416 43380
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.140.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s