பந்தல் – சப்னாஸ் ஹாசிம்:
சப்னாஸின் கதையுலகம் நம்மில் பலர் அறியாதது. அந்த உலகத்திலேயே சொல்லப்படாத கதைகள் இன்னும் பல நூறு இருக்கலாம். இவரது மொழிநடையும், வர்ணனைகளும் சேர்த்து கதைக்குள் சிறிதுநேரம் அடைத்து நம்மை வெளிவிடுகின்றன. எல்லா மதங்களிலும் தீவிரவாதம், மற்றவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றது.
பொந்து-;வைரவன் லெ.ரா:
மண்ட்டோ பாணியில் ஒரு கதை. விபச்சாரியிடம் இருக்கும் Possessiveness, ஊர் மொத்தமும் அடிமையாவது, காவலர்களின் ஓசி காஜி, மேரியின் வித்தியாசமான ஊமைத்தனம் என்று சுவாரசியத்திற்குப் பஞ்சமேயில்லாத கதை.
வைரவனுக்கு நல்ல மொழிநடை கூடி வந்திருக்கிறது.