கே.ஆர்.மீரா
மீரா தற்போதுஎழுதிக்கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர். இவரது நான்கு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கேரளாவின் Major Literary awards எல்லாவற்றையும் வென்றிருக்கிறார். ஆராச்சார் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும், பிற படைப்புகளுக்காக மூன்று முறை கேரள சாகித்யஅகாதமி விருதும் வாங்கி இருக்கிறார்.
மோ.செந்தில்குமார்:
தமிழ் பேராசிரியர். மொழிபெயர்ப்பாளர். பெயல் இதழின் ஆசிரியர். ஆராச்சாரில் தொடங்கி மீராவின் படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார்.
பொதுவாக ஒருமொழியில் வாசித்ததை அடுத்த மொழிபெயர்ப்பில் வாசிக்கும் நேரம் இருப்பதில்லை. இப்போது கூட சுபாஷ் சந்திரனின் A Preface to the Man நூலை எடுத்தவன், தமிழில் வந்திருப்பதால் வாசிக்காமல் வைத்துவிட்டேன். மலையாளம் தமிழில் கிடைத்தால் அதற்கே முன்னுரிமை. இவ்வளவிற்கும் பாத்திமா நல்ல மொழிபெயர்ப்பாளர். சென்ற வருடம் JCB விருது பெற்ற முகுந்தனின் டெல்லியின் இணைமொழிபெயர்ப்பாளர். ஆனால் செந்தில்குமாரின் மொழிபெயர்ப்பில் மீரா பலநாட்களாக இழுத்துக்கொண்டே இருக்கிறார்.
மீராவின் Hang woman மற்றும் Poison of Love இரண்டுமே பெண்களின் Anti Love stories.
இதிலும் ஒரு Anti Love வந்தாலும், ஒரு Sweeping love storyம் இணைந்து வருகிறது.
இந்து- முஸ்லீம் காதலித்தால், பெண் இந்துவாக இருந்து விட்டால் பிரச்சனை வராது என்ற Mythக்கு மீராவும் விதிவிலக்கல்ல. நாவலில் இருமுறை நடக்கிறது. முஸ்லீம் என்றால் இப்படித்தான் என்ற Mythஐ இந்த நாவலிலும் உடைக்க முயன்றிருக்கிறார் மீரா.
Slim ஆக ஆனால் Powerfulஆக நாவல்கள் எழுதுவது மீராவிற்கு வழக்கமாகி விட்டது.
முதலாவதாக பெண் விடுதலை. முப்பத்தாறு வருடங்கள் திருமணம் என்ற சிறையில் இருந்து அம்மா வெளியேறுகிறாள். மகள் சில வருடங்களிலேயே வெளியேறுகிறாள். பெண்ணியம் கூட யார் கோணத்தில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து மாறும்.
அப்பா எல்லாப் பெண்களும் நாள்முழுக்க உழைக்கத்தானே செய்தார்கள் உன் அம்மா மட்டும் என்ன தனியாகச் செய்தாள் என்கிறார். அம்மா வாயில்லா ஜீவன்கள் காட்டும் அன்பு மனிதர்களைக் காட்டிலும் பலமடங்கு உயர்ந்தது என்று தனியாகப் போகிறாள்.
Single Parent வளர்க்கும் குழந்தைகள், நல்ல IQ இருந்தாலும் கூடப் பழகுவதில், கும்பலில் கலப்பதில் பெரும்பாலான சமயங்களில் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். இந்த நாவலில் வரும் அத்வைத் எனும் சிறுவன் ABHD குறைபாடு மட்டுமின்றி சிறுவயதிலேயே தந்தையால் கைவிடப்பட்டவன். கூடுதல் மாவட்ட நீதிபதியாகத் தனியாக வாழும் தாய்க்கு அத்வைத்தை சமாளிப்பது என்பது இன்னொரு போராட்டம்.
அரசியல், இந்த நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கற்பனை இடத்தின் மீது பாபர் மசூதியின் சாயல்களை ஏற்றுகிறார் மீரா. ஆவணங்கள் மட்டுமே நீதிமன்றத்தில் உரிமையை நிலைநாட்ட உதவும், தீர்ப்புகளும் ஆவணங்களுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் வழிவழியாய் வந்த நம்பிக்கை என்பது வேறு. புனிதர் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தில், அதை வாங்கியவர் கழிப்பறைகள் கட்டப்போவதாக வதந்தி வருகிறது. பரஸ்பர அவநம்பிக்கை, பயம் எல்லா மோதல்களுக்கும் காரணமாக அமைகிறது.
மாயயதார்த்தத்தை இந்த நாவலில் வானுக்கு இழுத்துச் செல்லும் காதலுக்கு உபயோகித்திருக்கிறார். எட்வர்ட் ரோஜாவின் மணம் நாசியை நிரப்புவதில் இருந்து, பறக்கும் கார், காற்றில் கிடைக்கும் மிட்டாய்கள், வானத்தில் இருந்து பொழியும் பூ மழை, ஒருவரின் மனதை மற்றவர் அப்படியே படிப்பது என்று மாயயதார்த்தமும் காதலும் நாவலில் இணைந்து பயணிக்கிறது. ஆனால் தகவல்பிழை என்பதைக் காணமுடியாத அளவிற்கு மீராவின் ஆய்வு இருக்கும். முஸ்லீம்களுக்கு மந்திரவாதம் ஹராம், டிரஸ்ட் சொத்தை நீதிமன்றம் மூலம் மறுவிற்பனை செய்யலாம் என்பது போல பலதகவல்கள் சரிபார்க்கப்பட்டேநாவலில் இடம்பெறும்.
இந்த நாவலின் மையக்கதாபாத்திரம், அபூர்வ சக்தி படைத்த முன்னோர் ஒருவரைக் கனவிலும் நினைவிலும் உணர்கிறாள். இரண்டு தேவகன்னிகைகள் அவருக்குத்துணை. அந்த வகையில் இதை Modern fable என்றும் சொல்லலாம் . மொத்தத்தில் மீராவின் கலைநுட்பத்தில் மற்றுமொரு மாலை. செந்தில்குமாரின் மொழிபெயர்ப்பு அழகுக்கு அழகு சேர்க்கிறது. மீராவின் எல்லா நாவல்களையும், முக்கியமான சிறுகதைகளையும் செந்தில்குமார் கொண்டு வரவேண்டுமென்பது வாசகவிருப்பம்.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2022
விலை ரூ. 150.