தானச் சோறு- சரவணன் சந்திரன்: Beautifully written story, உள்ளடக்கத்தினால் மட்டுமல்ல, மொழிநடையாலும் தான். பழனிமலையும் சித்தரும். ஆன்மீகத்தின் குரல் ஆண்டிப்பண்டாரத்தை கயிற்றைக் கட்டி இழுப்பது போல் இழுக்கிறது. காட்டியதுடன் அவரது வேலை முடிந்து விடுகிறது. தானச் சோறு கடவுளின் பிரசாதம். Fantasy சாயலில் ஒரு முடிவு. Perfect story. https://tamizhini.in/2022/10/11/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b1%e0%af%81/ சித்திரச் சபை - சுரேஷ் பிரதீப்: சுரேஷ் பிரதீப் Is back. மீண்டும் வாசகர் இட்டு நிரப்பிக்கொள்ளும் இடைவெளியைக் கொண்டிருக்கும் நல்ல கதை. தீராத … Continue reading தமிழினி அக்டோபர் 2022 சிறுகதைகள்:
அகழ் அக்டோபர் – டிசம்பர் 2022 சிறுகதைகள்:
சரிவு - மயிலன் ஜி சின்னப்பன்: சரிவு குழந்தையைக் கூட்டி வராதது மட்டுமல்ல, செந்தி, கோமளாவை விட்டு பால்ராசிடம் கேட்காதது ஒரு சரிவு, அமுசு மூலமாக பால்ராசு தான் கேட்கிறான் என்று புரிந்து கொள்ளாதது சரிவு, சைக்கிளில் போகிறவன் முழுத்தப்பு செய்திருந்தாலும் கார்க்காரன் மேல் குற்றம் சொல்லும் சமூகக்கூட்டு மனநிலையைப் புரிந்து கொள்ளாதது சரிவு. இது போல் எத்தனையோ சரிவுகள். பையனைக் கூட்டி வந்தால் பின்னாடியே பால்ராசும் வந்து உட்கார்ந்து கொள்வான் என்று கடுங்கோபத்திலும் முன்யோசனையாக நடந்தது … Continue reading அகழ் அக்டோபர் – டிசம்பர் 2022 சிறுகதைகள்:
ஆவநாழி அக்டோபர்- நவம்பர் 2022 சிறுகதைகள்;
வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை - ஜேம்ஸ் தர்பர் - தமிழில் ஆர். பாலகிருஷ்ணன் : Fantasize செய்பவர்கள், அவர்களுக்கான தனி உலகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களது கடைக்கண் பார்வைக்காக எதிர்பாலினத்தினர் வரிசையில் நிற்பார்கள். இல்லை நிழல் நிஜமாகிறது ஷோபா போல், யாரையும் மன்னிப்பது/தண்டிப்பது குறித்த முழு அதிகாரம் பெற்றவர்கள். இதில் வருபவன் மனைவிக்கு பயந்த சராசரிக்கும் கீழானவன் எதையெல்லாம் பார்க்கிறானோ அதிலெல்லாம் சிறந்தவனாகிறான். Commanderஆக மருத்துவராக……… Firing squad முன் நின்றவன் தப்பித்துக் கொண்டானா தெரியவில்லை. … Continue reading ஆவநாழி அக்டோபர்- நவம்பர் 2022 சிறுகதைகள்;
மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் – தீபா நாகராணி:
ஆசிரியர் குறிப்பு: மதுரையைச் சேர்ந்தவர். MA M.Phil பட்டங்களைப் பெற்றவர். குங்குமம், பாவையர் மலர் போன்ற இதழ்களில் தொடர் எழுதியவர். இலக்கியம், நூல் விமர்சனம், பழங்குடி மக்கள் விழிப்புணர்வு போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு இது. முன்னுரைகளை கதைகளைப் படித்துத் தான் எழுதுகிறோம் என்பதை நிரூபிக்க முழுவதும் Spoilers முன்னுரைகளை எழுதுகிறார்கள் போலிருக்கிறது. விதிவிலக்கில்லாமல் எல்லோரும் செய்கிறார்கள். Suspense நாவல்களுக்குத் தமிழில் முன்னுரைகள் இருக்கின்றனவா? பெண்களின் உலகம் கதைகளில் விரிகிறது.நடுத்தரவயதுப் பெண் … Continue reading மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் – தீபா நாகராணி:
யாவரும் செப்-அக்டோபர் 2022 சிறுகதைகள்:
தஸ் ஸ்பேக் - சுஷில் குமார்: எதற்காக ஜரதுஸ்த்ரா மலையிலிருந்து கீழே இறங்கினான்? அதிமனிதனைக் காண. அவனைக் கண்டானா? இல்லை. பாரபாஸ் செய்த குற்றம் என்ன? அவனுக்குப் பதிலாகத் தூக்கிலிடப்பட்டவன் புனிதன். முதலாவதில் அதிமனிதனைக் குறித்த கற்பிதம், இரண்டாவதில் கழிவிரக்கம். இரண்டையும் ஒரு அநாதைப் பெண்ணின் வாழ்க்கையில் அழகாக இணைத்திருக்கிறார் சுஷில். https://www.yaavarum.com/%e0%ae%a4%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d/ தலைமுறை - கார்த்திக் புகழேந்தி: ஜாதி வெறி என்பது இரத்தத்தை விட அடர்த்தியானது என்பதைச் சொல்லும் கதை.வேறு பலர் சொல்லி இருந்தால் பிரச்சாரக் … Continue reading யாவரும் செப்-அக்டோபர் 2022 சிறுகதைகள்:
காலச்சுவடு செப்டம்பர் 2022 சிறுகதை:
நல்ல துப்பாக்கி - அ.முத்துலிங்கம்: தமிழில் எழுதப்பட்ட கதையில் பாகிஸ்தானியர்கள் வருவதும், நம்மை அவர்கள் எதிரிகள் என்பதும் கனவில் வரும் காட்சிகள் போல் தோற்றமளிக்கின்றன.பெஷாவர் நகரம் குறித்த அறிமுகம், பஞ்சு வியாபாரம், காபூல் கலவரம் வியாபாரத்தைப் பாதிப்பது என்று செல்லும் கதையில், மற்றொன்று இடையில் புகுந்து இதைக் குறித்து முற்றிலும் மறக்க வைத்துப்பின் கடைசியில் நினைவுபடுத்துகிறது. காஷ்மீர் விடுதலைக்காகப் போராடுவதே வாழ்க்கையின் இலட்சியம் என்று நினைக்கும் பாகிஸ்தானியர் இன்னும் இருக்கிறார்கள். அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். தற்காலிக வேலை … Continue reading காலச்சுவடு செப்டம்பர் 2022 சிறுகதை:
கனலி இதழ் 25- ஆகஸ்ட் 2022 சிறுகதைகள்:
ஊசித்தட்டான்களும் ஆறாவது விரலும் - வண்ணதாசன்: ஊசித்தட்டான் எந்த அவசரமுமில்லாமல் ஒரு நீலக்கோட்டை இழுத்து, கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கிறது. பொருட்கள், இடங்கள் பழைய நினைவுகளைக் கூட்டிவருவது யாருக்குமே தவிர்க்க முடியாதது. பிரேமா மட்டுமல்ல, பெண்களில் பெரும்பாலோர் பழையது எதையும் மறப்பதில்லை. எல்லாமே இருந்தாற்போல் இருந்து மாறும் வாழ்க்கையில் எதைத்தான் நிரந்தரம் என்று சொல்ல முடியும். ஆறாவது விரல் முதலில் பார்க்கையில் அசூயையா என்பது கூட வெளிக்காட்டாமல் அடங்கிக் கிடக்கிறது. சைக்கிளைக் கொடுத்து என்னவாகப் போகிறது. பிரேமாவிற்கு ஒரு … Continue reading கனலி இதழ் 25- ஆகஸ்ட் 2022 சிறுகதைகள்:
தமிழினி ஆகஸ்ட் 30, 2022 சிறுகதைகள்:
அரைப்பனை- சரவணன் சந்திரன்: சாமியாடி பற்றிய கதைகள் ஏராளம். சொல்லச்சொல்ல சுவாரசியமானவை. சுடலைக்கு ஆதரவு எவ்வளவு இருந்திருக்கிறதோ அவ்வளவு வெறுப்பும் சம்பாதித்திருக்கிறார். கடைசிவரை சுடலை குறித்த மர்மத்திரை விலக்கப்படாமலேயேஇருக்கிறது. மயில்சாமி சொல்வதில் பாதிப் பொய், மீதி உண்மை இருக்கலாம். எது எப்படியானாலும் அந்த கடைசிப் புறக்கணிப்பு மட்டும் ஊர்க்காரர்கள் பலர் பார்த்ததால் நிஜம். வெறுப்பு மண்டிக் கிடந்த சுடலையால் அதைத் தாங்க முடியாமல் போயிருக்க வேண்டும். சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை. https://tamizhini.in/2022/08/30/%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/ எட்டு நிமிடங்கள் - இந்திரா … Continue reading தமிழினி ஆகஸ்ட் 30, 2022 சிறுகதைகள்:
கனலி ஜூலை 31,2022 சிறுகதைகள்:
ஊறா வறுமுலை - ஜா.தீபா: பால் ஊறாத முலை. நான் வாசித்த வரையில் தீபாவின் Best இந்தக்கதை. கனவும் நினைவும் கலந்து அரைமயக்க சாயலில் ஆரம்பிக்கும் கதை, பாண்டஸி கூறுகளை உள்வாங்கிப்பின், யதார்த்தத்தில் முடிகிறது. குதிரை பௌருஷத்தின் குறியீடு. திரௌபதி பேசுவதை பேச்சியால் கேட்க முடிவதில்லை, ஆனால் மாயா கேட்கிறது. மாயாவிற்காகவே அவள் பேசுகிறாள். அந்தப் பேச்சில் தான் எத்தனை அர்த்தங்கள்! Yugantaவில் கார்வே, திரௌபதி அர்ச்சுனனை அதிகம் காதலித்ததற்குப் பதிலாக பீமனைக் காதலித்திருக்க வேண்டும் என்று … Continue reading கனலி ஜூலை 31,2022 சிறுகதைகள்:
கலகம் ஆகஸ்ட் 2022 சிறுகதைச் சிறப்பிதழ்:
பிறிதொரு ஞாயிறு - ஜெகநாத் நடராஜன்: காத்திருப்பில் காதல் வருவது எப்போதும் நிகழ்கிறது. விவாகரத்து ஆன விஷயத்தை மாஸ்க் அணிந்த Strangerஇடம் எதற்கு சொல்கிறாள்? ஒழிக, உங்கள் துப்பாக்கிகள் - கௌதம சித்தார்த்தன்: பின் நவீனத்துவக் கதை சொல்லலில் ஒரு மேஜிக் இந்த சிறுகதை. Jump Cut methodல் கதை அழுத்தமான ஒரு உணர்வைப் பதித்துச் செல்கிறது. அதரச்சிணுங்கல், ஆஹா. கணேஷ்பீடி - மனுஷி: சிறுமியின் பார்வையில் நகரும் கதை. மௌனங்களின் ஓலம் சிலநேரங்களில் செவிப்பறையில் பலமாக … Continue reading கலகம் ஆகஸ்ட் 2022 சிறுகதைச் சிறப்பிதழ்: