நல்ல துப்பாக்கி - அ.முத்துலிங்கம்: தமிழில் எழுதப்பட்ட கதையில் பாகிஸ்தானியர்கள் வருவதும், நம்மை அவர்கள் எதிரிகள் என்பதும் கனவில் வரும் காட்சிகள் போல் தோற்றமளிக்கின்றன.பெஷாவர் நகரம் குறித்த அறிமுகம், பஞ்சு வியாபாரம், காபூல் கலவரம் வியாபாரத்தைப் பாதிப்பது என்று செல்லும் கதையில், மற்றொன்று இடையில் புகுந்து இதைக் குறித்து முற்றிலும் மறக்க வைத்துப்பின் கடைசியில் நினைவுபடுத்துகிறது. காஷ்மீர் விடுதலைக்காகப் போராடுவதே வாழ்க்கையின் இலட்சியம் என்று நினைக்கும் பாகிஸ்தானியர் இன்னும் இருக்கிறார்கள். அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். தற்காலிக வேலை … Continue reading காலச்சுவடு செப்டம்பர் 2022 சிறுகதை:
கனலி இதழ் 25- ஆகஸ்ட் 2022 சிறுகதைகள்:
ஊசித்தட்டான்களும் ஆறாவது விரலும் - வண்ணதாசன்: ஊசித்தட்டான் எந்த அவசரமுமில்லாமல் ஒரு நீலக்கோட்டை இழுத்து, கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கிறது. பொருட்கள், இடங்கள் பழைய நினைவுகளைக் கூட்டிவருவது யாருக்குமே தவிர்க்க முடியாதது. பிரேமா மட்டுமல்ல, பெண்களில் பெரும்பாலோர் பழையது எதையும் மறப்பதில்லை. எல்லாமே இருந்தாற்போல் இருந்து மாறும் வாழ்க்கையில் எதைத்தான் நிரந்தரம் என்று சொல்ல முடியும். ஆறாவது விரல் முதலில் பார்க்கையில் அசூயையா என்பது கூட வெளிக்காட்டாமல் அடங்கிக் கிடக்கிறது. சைக்கிளைக் கொடுத்து என்னவாகப் போகிறது. பிரேமாவிற்கு ஒரு … Continue reading கனலி இதழ் 25- ஆகஸ்ட் 2022 சிறுகதைகள்:
தமிழினி ஆகஸ்ட் 30, 2022 சிறுகதைகள்:
அரைப்பனை- சரவணன் சந்திரன்: சாமியாடி பற்றிய கதைகள் ஏராளம். சொல்லச்சொல்ல சுவாரசியமானவை. சுடலைக்கு ஆதரவு எவ்வளவு இருந்திருக்கிறதோ அவ்வளவு வெறுப்பும் சம்பாதித்திருக்கிறார். கடைசிவரை சுடலை குறித்த மர்மத்திரை விலக்கப்படாமலேயேஇருக்கிறது. மயில்சாமி சொல்வதில் பாதிப் பொய், மீதி உண்மை இருக்கலாம். எது எப்படியானாலும் அந்த கடைசிப் புறக்கணிப்பு மட்டும் ஊர்க்காரர்கள் பலர் பார்த்ததால் நிஜம். வெறுப்பு மண்டிக் கிடந்த சுடலையால் அதைத் தாங்க முடியாமல் போயிருக்க வேண்டும். சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை. https://tamizhini.in/2022/08/30/%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/ எட்டு நிமிடங்கள் - இந்திரா … Continue reading தமிழினி ஆகஸ்ட் 30, 2022 சிறுகதைகள்:
கனலி ஜூலை 31,2022 சிறுகதைகள்:
ஊறா வறுமுலை - ஜா.தீபா: பால் ஊறாத முலை. நான் வாசித்த வரையில் தீபாவின் Best இந்தக்கதை. கனவும் நினைவும் கலந்து அரைமயக்க சாயலில் ஆரம்பிக்கும் கதை, பாண்டஸி கூறுகளை உள்வாங்கிப்பின், யதார்த்தத்தில் முடிகிறது. குதிரை பௌருஷத்தின் குறியீடு. திரௌபதி பேசுவதை பேச்சியால் கேட்க முடிவதில்லை, ஆனால் மாயா கேட்கிறது. மாயாவிற்காகவே அவள் பேசுகிறாள். அந்தப் பேச்சில் தான் எத்தனை அர்த்தங்கள்! Yugantaவில் கார்வே, திரௌபதி அர்ச்சுனனை அதிகம் காதலித்ததற்குப் பதிலாக பீமனைக் காதலித்திருக்க வேண்டும் என்று … Continue reading கனலி ஜூலை 31,2022 சிறுகதைகள்:
கலகம் ஆகஸ்ட் 2022 சிறுகதைச் சிறப்பிதழ்:
பிறிதொரு ஞாயிறு - ஜெகநாத் நடராஜன்: காத்திருப்பில் காதல் வருவது எப்போதும் நிகழ்கிறது. விவாகரத்து ஆன விஷயத்தை மாஸ்க் அணிந்த Strangerஇடம் எதற்கு சொல்கிறாள்? ஒழிக, உங்கள் துப்பாக்கிகள் - கௌதம சித்தார்த்தன்: பின் நவீனத்துவக் கதை சொல்லலில் ஒரு மேஜிக் இந்த சிறுகதை. Jump Cut methodல் கதை அழுத்தமான ஒரு உணர்வைப் பதித்துச் செல்கிறது. அதரச்சிணுங்கல், ஆஹா. கணேஷ்பீடி - மனுஷி: சிறுமியின் பார்வையில் நகரும் கதை. மௌனங்களின் ஓலம் சிலநேரங்களில் செவிப்பறையில் பலமாக … Continue reading கலகம் ஆகஸ்ட் 2022 சிறுகதைச் சிறப்பிதழ்:
தமிழ்வெளி ஜூலை 2022 சிறுகதைகள்:
குதிரை வண்டில் - ச.ஆதவன்: கதைகள் ஒரு சம்பவத்தையோ, ஒரு புறக்காட்சியையோ, பிரச்சனயையோ, உணர்வையோ ஏதாவது ஒன்றை மையமாக வைத்து எழுதப்படலாம். ஆனால் அது வாசகர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விழைய வேண்டும். இது அழிவு, பஞ்ச காலத்தைப் பற்றிய வர்ணனைகளுடன் நின்று விடுகிறது. கடல் என்னை நேசிக்கிறது- மியா கூட்டோ மியா கூட்டோவின் Sleepwalking Land அவரைத் தொடங்குவதற்கு சரியான புள்ளி. இந்தக் கதை அவருடைய புகழ்பெற்ற கதை. கவர்ச்சி, காமத்தில் ஆரம்பிக்கும் கதை, … Continue reading தமிழ்வெளி ஜூலை 2022 சிறுகதைகள்:
ஆவநாழி- இதழ் 13- இரண்டாம் ஆண்டு சிறப்பிதழ்- சிறுகதைகள்:
லாட்டி - ஷிவானி - தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி: அனுராதாவின் கதைகள் தேர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். இம்முறை தவறி விட்டது. குஜராத்தில் பள்ளிச்சிறுமிகள் போல் இருக்கும் பெண்கள் தலையில் அத்தனை வீட்டு வேலைகளையும் சுமத்துவதைப் பார்த்திருக்கிறேன். அனுதாபத்தைக் கோரி எழுதப்பட்ட கதை போல் தெரிகிறது. காப்டன் பானோவைக் கவனித்தது போல் எத்தனை கணவர்கள் கவனிப்பார்கள்? நூறு பிள்ளைகள் பெற்றவள் - எஸ். செந்தில் குமார்: நல்லம்மா ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். கோபம் கண்ணை மறைக்கையில் எதிரில் … Continue reading ஆவநாழி- இதழ் 13- இரண்டாம் ஆண்டு சிறப்பிதழ்- சிறுகதைகள்:
மன்றில் ஓசூர் இலக்கிய சிறப்பிதழ் ஜூலை 2022 சிறுகதைகள்:
முளை - பா.வெங்கடேசன் ; மகாகவி பாரதியார் பதினான்கு வயது சிறுவனாக அவருடைய தந்தையுடன் நடத்தும் உரையாடலே இந்தக்கதை. பாரதியின் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட உண்மைகளுடன், உரையாடலில் புனைவு கலக்கிறது. பா.வெயின் ஆரம்பகால சிறுகதையாக இது இருக்க வேண்டும். பண்டிகையும் பலியும்- கன்னட மூலம் பி.டி. லலிதா நாயக்- தமிழில் ஜெயந்தி.கி: பண்ணையார்- பண்ணையாள்- கொத்தடிமை என்ற அதே பழைய கதை. வித்தியாசமாக பரமஏழை அம்மனுக்கு ஆடு நேர்ந்து கொண்டு ஒருவருடம் அடிமையாகப் போகிறான். கடவுள் எப்படியும் காப்பாற்றுவார் … Continue reading மன்றில் ஓசூர் இலக்கிய சிறப்பிதழ் ஜூலை 2022 சிறுகதைகள்:
புரவி ஜூலை 2022 சிறுகதைகள்:
நீர்க்கோழி - காளிபிரசாத்: நெருங்கிய நண்பர்களுக்கு இடையே ஒரு பெண் வருவது எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதே கதையை புதுமையாகச் சொல்லி இருக்கிறார் காளிபிரசாத். சட்டென்று காட்சிகள் மாறிச் செல்லும் கதையில் முஸ்லீமைக் காதலித்தால் முஸ்லீமாக மாற வேண்டும் என்ற கட்டாயம் போல் பல விஷயங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.மெஹரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உவர்ப்பு - வங்காளத்தில் திலோத்தமா மஜூம்தார் - தமிழில் அருந்தமிழ் யாழினி: மிக எளிமையான கதை. இந்தியாவில் இன்னும் … Continue reading புரவி ஜூலை 2022 சிறுகதைகள்:
குறி இதழ் 32- ஜூன்-செப்டம்பர் 2022 சிறுகதைகள்:
வெனிலா - குமார செல்வா: வெனிலா வாசனையைத் தருவது போலவே பாலுணர்வையும் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. நிர்மலா டீச்சரின் பாலுணர்வு தான் மொத்தக்கதையும். voyeurism, சிறுவர்களுடன் Misadventures என்று அத்தனையும் செய்து பார்க்கிறாள் நிர்மலா. சம்பாத்தியம், டியூஷன், தோட்டம் என்று மெல்லக் கதைக்குள் புகுந்த பின்னரே Main story வருகிறது. டீச்சரின் கணவனின் Flashback எளிதாகச் சொல்லி முடிக்கப்பட்டிருக்கிறது. அவன் கதையில் மட்டுமல்ல, வாசகர்களுக்கும் ஒன்றும் பிரயோஜனமில்லை, Score செய்வது எல்லாமே நிர்மலா டீச்சர் தான். கோழிகளுக்குப் … Continue reading குறி இதழ் 32- ஜூன்-செப்டம்பர் 2022 சிறுகதைகள்: