லூக்கா 5:8 - வைரவன் லெ.ரா: கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. சாபம் என்பது மற்றொரு நம்பிக்கை. இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் பற்றிய கதை இது. மனைவி ஏன் பொய்சாட்சி சொல்லும் ஒருவனை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கிறாள்? அவளுக்கு வேண்டியது சொன்னதைக் கேட்டு நடக்கும் பாதுகாப்பான ஒருவன். மனைவி முழுக்கவே Practicalஆக இருக்கையில் இவனது பொறுப்புகள் குறைந்தது என்று நிம்மதியாக இருக்காமல் ஏன் அலைபாய்கிறான்! சிலர் அப்படித்தான் அவர்களே ஏற்படுத்திக் கொண்ட வளையத்தில் மாட்டிக் … Continue reading கனலி 17ஆவது இணைய இதழ்- May 2022 சிறுகதைகள்:
வியூகம் மே 2022:
சி.விமலனின் பாலசுப்பிரமணியம் குறித்த கட்டுரை ஒரு Nostalgic பயணம். SPB எல்லோருக்கும் பிடித்த பாடகர். கானா பிரபாவின் பாடகன் சங்கதி என்ற நூலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.இவர் மனோரமாவுடன் பாடிய பூந்தமல்லியிலே பாடலைப் பலர் மறந்தேவிட்டார்கள் போலிருக்கிறது. விதி- சரத்விஜேசூரிய- தமிழில் ரிஷான் ஷெரீப்: சிங்களக்கதைகள் தொடர்ந்து ஆச்சரியமூட்டுகின்றன. ஒரு கடிதத்தில் தான் எல்லாமே தொடங்குகிறது. அதில் ஒரு உண்மை பகிரப்படுகிறது. அந்த உண்மையே ஒரு உறவு முறியக் காரணமாக இருந்திருக்கிறது. விக்ரம் இன்றைய சராசரி … Continue reading வியூகம் மே 2022:
சொல்வனத்தில் வெளிவந்த அனுராதா கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்புக் கதைகள்:
நான் சிறுவயதில் இருந்தே எந்தப் பத்திரிகையிலும் ஒரு தொடர்கதை கூடப் படித்ததில்லை. காத்திருப்பில் பொறுமை இருந்திருந்தால் சில காதல்கள் கூட கைகூடியிருக்கும். இப்போது ஏராளமான நூல்களைத் தூங்கவைத்துவிட்டு வாரஇதழ், மாதமிருமுறை எதையும் வாசிப்பது மித்ரதுரோகம் போல் மனதை உறுத்துகிறது. எதனால் சொல்வனத்தை மட்டும் தவிர்க்கிறேன் என்று இப்போது நிறையப்பேர் கேள்வி கேட்பதால் இந்த விளக்கம் அவசியமாகிறது. அனுராதாவின் மொழிபெயர்ப்புகளில் என்னை முக்கியமாகக் கவர்ந்தது அவர் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் இந்திய எழுத்தாளர்கள், அநேகமாகப் பெண் எழுத்தாளர்கள். ஆஷா பூர்ணாதேவி, … Continue reading சொல்வனத்தில் வெளிவந்த அனுராதா கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்புக் கதைகள்:
வல்லினம் மே 2022 சிறுகதைகள்:
மேலங்கி - ஆங்கில மூலம் ஐசக் தினெசென்- தமிழில் சுசித்ரா: Infidelity மற்றும் அதனால் ஏற்படும் குற்ற உணர்வே கதை. ஏஞ்சலோவின் பார்வையிலேயே கதை நகர்கிறது. ஒரே சம்பவத்தை ஒட்டி வேறுவேறு கனவுகள் காண்கிறான். அல்லோரியின் மௌனமே இந்தக் கதையின் மிக நுட்பமான விஷயம்.லுக்ரீசியா தவறுக்குத் துணிந்தவள். அவள் கனவில் வந்தது போல் பேர் சொல்லி அழைக்காமல் இருந்திருக்கலாம். கணவன் முகத்தைப் பார்க்கும்வரை பேசாமல் இருந்திருக்கலாம். அல்லோரிக்குக் கடைசிவரை தெரியாமல் போயிருக்கலாம்.அவர் ஏஞ்சலோவின் கன்னத்தில் முத்தமிடுகிறாரே! ஆனால் … Continue reading வல்லினம் மே 2022 சிறுகதைகள்:
காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
கிழிவு -. கலாமோகன்: கலாமோகனின் கதைகள் Fantasyக்கு கதை வடிவம் கொடுக்க முயல்பவை. நான் வாசித்த அநேக கதைகளில் காணும் பெண்களை எல்லாம் கூடும் வயதான பிம்பம் ஒன்று வந்து போகும். அவரது எழுத்தில் அலைபாயும் உணர்வுகளைக் கடத்த முயலும் சற்றே பிறழ்ந்த மனம் இந்தக் கதையிலும் வருகின்றது. சொந்த நாட்டில் அகதியாக நடத்தப்படும் நிலை யாருக்கும் வரக்கூடாது. சிங்களவரும் தமிழரும் ஒருவரை ஒருவர் பார்த்து பயப்படுகின்றனர், ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். எல்லாம் OK. வாசித்து அந்த நேரத்தில் … Continue reading காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
அகநாழிகை ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
அப்பாம்மை - ஆர். காயத்ரி : ஆயிரம் தான் சொன்னாலும் ஆணின் உலகம் வேறு, பெண்ணின் உலகம் வேறு. அது அவர்களின் எழுத்திலும் எப்படியும் வெளிப்பட்டே தீரும். நான்கு நாட்கள் டப்பாவில் அடைத்த முட்டைக்கோஸ் (அது புதிதாக வேகும் போதே பக்கத்தில் நிற்க முடியாது) ஆலிலை வயிறு என்ற வார்த்தைகளில் தோன்றும் வன்மம் ( ஆனால் பின்னால் இந்த வார்த்தைகள் பச்சாதாபத்தை வளர்க்க உதவப் போகின்றன) , பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்குமுள்ள கடலளவு வித்தியாசம் (சேனைக்கிழங்கை … Continue reading அகநாழிகை ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
தமிழ்வெளி- காலாண்டிதழ்-6- ஏப்ரல் 2022 சிறுகதைகள்;
இரவில் -ஜமைக்கா கின்கெய்ட்- தமிழில் சமயவேல்: இரண்டுகாரணங்களால் கின்கெய்டை மொழிபெயர்ப்பது சிரமம். முதலாவது கவிதை கலந்த அவரது மொழிநடை. இரண்டாவது யதார்த்தவாதத்தில் நகரும் கதை திடீரென சர்ரியல் பேண்டஸிக்குச் சென்று திரும்புவது. சமயவேல் எளிதாக, எளிமையாக மொழிபெயர்ப்பை செய்திருக்கிறார். இந்தக் கதை முழுக்கவே ஒரு சிறுபெண்ணின் பார்வையிலான உலகமும் அவள் கனவுகளும். அவள் உலகநடப்புகளைக் கேள்வி கேட்பதில்லை, அவள் பார்வையை மட்டும் சொல்கிறாள். வழக்கமாக இவர் கதைகளில் வரும் பெண்- அம்மா உறவின் Dynamics இந்தக் கதையிலும் … Continue reading தமிழ்வெளி- காலாண்டிதழ்-6- ஏப்ரல் 2022 சிறுகதைகள்;
தமிழினி ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
சன்னக்கட்டை - ஆழிவண்ணன்: ஒரே தொழிலில் இருப்பவர்கள் பொறாமைப் படுவது ஒரு உளவியல். உடன் பிறந்தோரில் ஒருவர் அந்தஸ்து உயர்ந்தால் மற்றவர்களது பொறாமைக்கணைகள் உடன் பாயும். யாரும் அம்பானியைப் பார்த்துப் பொறாமைப்படப் போவதில்லை. தேரையும், சன்னக்கட்டையையும் குறித்து இவ்வளவு விளக்கமாக இப்போது தான் வாசிக்கிறேன். கடைசி இரண்டு பத்திகளுக்கு முன்னே "மிக அருகில் வந்து நின்றது' என்பதுடன் கதை முடிந்து விடுகிறது. மானு மோராஸ் - சரவணன் சந்திரன்: மாய யதார்த்தம், பேண்டஸி, Hysterical realism போன்ற … Continue reading தமிழினி ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
யாவரும் ஏப்ரல்-மே 2022 சிறுகதைகள்:
ஜில்லா விலாஸம் - கார்த்திக் புகழேந்தி: அண்மைக்கால சரித்திரத்தை பின்னணியாக வைத்துக் கதை எழுதுவது மிகவும் சிரமம். இதில் கூட வ.வு.சியின் கைது 1908 எனவே மற்ற தேதிகளில் குழப்பம் இருக்கிறது.தேதிகளே இல்லாமல் கதையை எழுதியிருக்கலாம். இதைவிட்டுப் பார்த்தால் இந்தக்கதை ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையை அப்படியே கொண்டு வந்திருக்கிறது. ஆங்கீலேய ஆட்சியில் இருந்து தி.மு.க முதலாவதாகப் பதவியேற்ற காலம் வரை நகரும் கதையில் எப்போதோ செய்த mischief கண்டுபிடிக்கப் படுகிறது. தெளிவாக தங்கு தடையின்றி நகரும் கதை. … Continue reading யாவரும் ஏப்ரல்-மே 2022 சிறுகதைகள்:
புரவி ஏப்ரல் 2022 ஆண்டுவிழா சிறப்பிதழ் சிறுகதைகள்:
கொடிக்கால் - கார்த்திக் புகழேந்தி: நாட்டார் வாய்மொழிக்கதை சொல்லும் பாணியில் சொல்லப்பட்ட கதை. வட்டார வழக்கு வசீகரிக்கின்றது. ஜாதி பேதம், வர்க்கபேதம் காதலுக்கு சமாதி கட்டுவது காலங்காலமாய் நடந்து வந்திருக்கிறது. சாந்தியடையாது அலையும் ஆவியை சமாதானப்படுத்த, கதையில் சொல்லப்படும் யுத்தி innovative. ஆச்சி கதாபாத்திரம் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கார்த்திக் புகழேந்தி தொடர்ந்து எழுதவேண்டும். கடவுளின் டி என் ஏ - கமலதேவி: இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மதுரையில் டி வி எஸ்க்காக … Continue reading புரவி ஏப்ரல் 2022 ஆண்டுவிழா சிறப்பிதழ் சிறுகதைகள்: