வாசிப்பெனும் வானம் – அழகுநிலா:

ஆசிரியர் குறிப்பு: தஞ்சை மாவட்டம் செண்டங்காடில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசிக்கிறார். இலக்கிய விமர்சனத்தைத் தொடர்ந்து செய்யும் இவர், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், நான்கு சிறார் நூல்கள் முதலியவற்றை வெளியிட்டிருக்கிறார். இது வாசிப்பனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கிய விமர்சனம் என்பது ரசனை அடிப்படையிலான விமர்சனம் மற்றும் திறனாய்வு ரீதியான விமர்சனம் என்று பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். திறனாய்வு என்று எடுத்துக் கொண்டால் அங்கே, ஏற்கனவே அந்த கருப்பொருளில் வந்த நூல்களுடன் ஒப்பிடுதல், … Continue reading வாசிப்பெனும் வானம் – அழகுநிலா:

மொழியின் நிழல் – ந.பெரியசாமி:

ஆசிரியர் குறிப்பு: ஓசூரில் வசிப்பவர். தொடர் வாசகர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இது இவருடைய முதல் கட்டுரைத் தொகுப்பு. வாசிப்பு என்பது தனிப்பட்ட மகிழ்பனுபவம் என்பது உண்மை. பல எழுத்தாளர்கள், வாசித்தாலும், வாசிப்பனுபவத்தை எழுதுவதில்லை. அடுத்தவர் மீது அநாவசியமாக நாம் ஏன் வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும் என்ற நல்லெண்ணம் மட்டுமே காரணம். அப்படியே எழுதினாலும் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என்று உபத்திரவமில்லாமல் எழுதுவது. இந்த சூழலில் நான்கு கவிதைத் தொகுப்புக்குப் பின், தன் … Continue reading மொழியின் நிழல் – ந.பெரியசாமி:

அத்துமீறும் வாசிப்பு- றியாஸ் குரானா:

ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் அக்கறைப்பற்றைச் சேர்ந்த இலக்கியச் செயல்பாட்டாளர், கவிஞர், ஈழப் பின்நவீனத்துவ எழுத்துக்கான களத்தைக் கட்டமைத்த முன்னோடி. ஐந்து கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள், ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இது இவரது அண்மையில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு. நவீனகவிதை மனம் என்ற தலைப்பில் பன்னிரண்டு கட்டுரைகள் நவீனகவிதைகள் பற்றிய கூடுதல் புரிதலுக்கு விளக்கமளிக்கிறது. முதல் கட்டுரையில் 'கன்னியாகுமரியில்' என்ற பசவய்யாவின் கவிதை குறித்து விளக்குகிறார். ஆட்டுக்குட்டி பார்வைக் கோணத்தை மறைப்பதை அழகுமுகம் பார்வைக்கோணத்தில் … Continue reading அத்துமீறும் வாசிப்பு- றியாஸ் குரானா:

பனி உருகுவதில்லை – அருண்மொழி நங்கை:

ஆசிரியர் குறிப்பு: திருவாரூர் மாவட்டம் அருகிலுள்ள புள்ளமங்கலம் கிராமத்தில் ஆசிரியப் பெற்றோருக்குப் பிறந்தவர். சிறுவயதிலேயே இசையிலும், இலக்கியத்திலும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். தமிழின் மிகப்பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவியார். இந்த நூல் இவருடைய முதல் நூல், சமீபத்தில் வெளிவந்த அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு. அதிகம் வாசித்து, அதிகம் எழுதாதவர்களின் மொழிநடையில் எப்போதுமே ஒரு வசீகரமுண்டு. அருண்மொழி எழுதாமலேயே, வாசிப்புடன் இருந்து, இத்தனை காலத்திற்குப் பிறகு எழுத ஆரம்பித்திருக்கிறார். இவரது மொழி சரளமாக இருக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே இது … Continue reading பனி உருகுவதில்லை – அருண்மொழி நங்கை:

சில ஆசிரியர்கள் சில நூல்கள் – அசோகமித்திரன்:

ஆசிரியர் குறிப்பு: செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். இருபத்தொன்பதாம் வயதில் இருந்து சென்னையில் வசித்தவர். A writer's writer. அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அதிகபட்சமாக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார். ஞானபீட விருதை எப்போதோ பெற்றிருக்க வேண்டியவர். தமிழில் மட்டும் தான் இது போல் அநீதிகள் நடக்கும். இந்த நூல் வெளியான போது படித்தது. அதற்குள் முப்பத்து நான்கு வருடங்கள் முடிந்து விட்டன. வாழ்க்கை, பள்ளத்தை நோக்கி ஓடும் பந்தைப்போல் வேகமெடுத்துஓடுகிறது. 1987க்குப்பிறகு இரண்டாம் பதிப்பு வந்ததா … Continue reading சில ஆசிரியர்கள் சில நூல்கள் – அசோகமித்திரன்:

மதுரை போற்றுதும் -. ச.சுப்பாராவ்:

ஆசிரியர் குறிப்பு: மதுரையில் பிறந்து, வளர்ந்து, கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அங்கேயே வேலை பார்ப்பவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறந்த வாசகர். இது சமீபத்தில் வெளியாகிய இவரது மதுரை நினைவுகள் குறித்த நூல். ஒரே ஊரில் வாழ்ந்து முடிப்பவர்களைக் கண்டால் எனக்கு சற்றே பொறாமை வரும். அலுவல் நிமித்தம் ஒவ்வொரு மூன்று வருடங்களிலும் புதிய ஊருக்குச் சென்றது, அனுபவச்சேர்க்கைக்கு உதவினாலும் கூட,பழகிய தெருக்களில், பழைய நினைவுகளில் வலம் வருவது கொடுப்பினை, முப்பது வருடங்களுக்குப் பிறகு போனால், மதுரையே எனக்கு … Continue reading மதுரை போற்றுதும் -. ச.சுப்பாராவ்:

ஊர்சுற்றிப் பறவை – ராம் தங்கம்:

ஆசிரியர் குறிப்பு: நாகர்கோவிலில் பிறந்தவர். ஊடகத்துறையில் பணியாற்றியவர். திருக்கார்த்தியல் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் பரவலாகத் தெரிய ஆரம்பித்தவர். 2015ல் அச்சுநூலாக வந்த இந்தப்புத்தகம் இப்போது கிண்டிலில் வெளியாகியிருக்கிறது. வரலாற்று நூல் போன்றோ பயணநூல் போன்றோ இல்லாமல் ஒரு அரட்டை அடிக்கும் தொனியில் பலவிசயங்களும் பேசப்படுகின்றன. குமரிமாவட்டத்தில் பிறந்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்கையில் அவர்களது சிறந்த படைப்புகளும் சொல்லப்படுவது புதியவாசகர்களுக்கு உதவியாக இருக்கும். கிருஷ்ணன் நம்பியின் நீலக்கடல் மிகமுக்கியமான தொகுப்பு. குழந்தைகள் உலகத்தைத் தத்ரூபமாகச் சித்தரித்து இருப்பார். … Continue reading ஊர்சுற்றிப் பறவை – ராம் தங்கம்:

உயிர்த்த ஞாயிறு – ஸர்மிளா ஸெய்யித்:

ஆசிரியர் குறிப்பு: இலங்கை ஏறாவூரில் பிறந்தவர். சமூகப்பணித்துறையில் பட்டப்படிப்பையும், இதழியல், கல்வி முகாமைத்துவம், உளவியல் துறைகளையும் பயின்றவர். பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர். இதுவரை சிறகு முளைத்த பெண், உம்மத், ஒவ்வா, பணிக்கர் பேத்தி ஆகிய படைப்புகள் வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வந்த அனுபவப்பதிவு நூல். மதங்களின் பெயரால் நடக்கும் எந்த போர்களுக்கும் நிரந்தரத்தீர்வு கிடைத்ததாக சரித்திரமே இல்லை. சிலுவைப்போர்கள் அப்படி நிரந்தரத்தீர்வைக் கொண்டு வந்திருந்தால் உலகமே கிருத்துவமதத்தை ஏற்றுக்கொண்டிருந்திருக்கக்கூடும். மதங்களே இல்லாத உலகத்தை நோக்கி மனிதம் எப்போது நகருமோ … Continue reading உயிர்த்த ஞாயிறு – ஸர்மிளா ஸெய்யித்:

எச்சரிக்கை – மிக நீண்ட பதிவு:

இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்- தொகுப்பு பா.பிரபாகரன் & யமுனா ராஜேந்திரன்: ஒரு எழுத்தாளரை விமர்சித்து இவ்வளவு பெரியநூலா? ஜெயமோகனின் மேன்மையைப் புரியாதவர்கள் என்னவோ சொல்லிப் போகட்டும், நீங்கள் தொடமுடியாத தூரத்தில் ஜெயமோகன் இருக்கிறார் என்பது போல் பல எதிர்வினைகள் பக்தர்களிடமிருந்து. நடுநிலையாளர்கள் கூடஉள்ளபடியே, நல்ல நோக்கத்துடன் இந்த நூலின் தேவை குறித்து சந்தேகப்பட்டனர். இந்தக் காரணங்களினாலேயே நூல் பற்றிப் பேசுமுன் மற்றவர்கள் பற்றி இவர் பேசியதைப் பார்க்க வேண்டியதாகிறது. நடுநிலையாளர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் … Continue reading எச்சரிக்கை – மிக நீண்ட பதிவு:

மாயவலை – பா.ராகவன்:

ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து, வளர்ந்து, வாழ்பவர்.கல்கி, அமுதசுரபி, குமுதம் பத்திரிகையிலும் பணியாற்றியவர். புதினங்கள், சிறுகதைகள், சிறார் நூல்கள் என்று புனைவின் எல்லாத் தளங்களிலும் நூல்களை எழுதியவர். அல்புனைவில் கிட்டத்தட்ட இருபத்தைந்து அரசியல் வரலாறு நூல்களை எழுதியவர். இந்த நூல் குமுதம் ரிப்போர்டரில் தொடராக வந்தது. மரம் சும்மாயிருந்தாலும் ……… என்பது வாசிப்பதற்கும் சொன்னது என்று எனக்கு இதற்குமுன் தெரிந்திருக்கவில்லை. மாயவலையைப் படியுங்கள் முதலில் என்று நண்பரின் விடாத வற்புறுத்தல். எழுத்தாளர் ஆறுவருடம் உழைத்திருக்கிறார் என்று அவர் … Continue reading மாயவலை – பா.ராகவன்: