ஆசிரியர் குறிப்பு: கண்டியில் பிறந்தவர். ஆசிரியையாகப் பணிபுரிபவர். பல வருடங்களாகக் கவிதைகள் எழுதி வரும் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு இது. புனைவுகள், கவிதைகள் என்பவை எல்லையற்ற வெளி. சாதாரணமாக நாம் பேசாததைப் பேச, செய்யாததைச் செய்ய அதில் முடியும். உதாரணத்திற்கு எதிர்வீட்டுப் பெண்ணை நிஜத்தில் கொலைசெய்ய முடியாது எனில் கதையில் அவளைக் கொண்டு வந்து கொன்று விடலாம். பெண்கள் அதிகமாகத் தாங்கள் சொல்ல வேண்டியவற்றை சொல்வதற்கு கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதனாலேயே கவிஞர்களில் பெரும்பகுதி … Continue reading ஒரு மிடறு அடர் வெண்மை – மிஸ்ரா ஜப்பார்:
சொல்லில் சரியும் சுவர்கள் – ரிஸ்மியா யூசுப்:
ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் வெளிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர். அரசுப்பள்ளி ஆசிரியர். தமிழ் முதுகலைமாமணி பட்டம் பெற்றவர். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இந்தக் கவிதையை விளக்க முயன்றால் பிரத்யேக வாசிப்பனுபவத்தைக் கெடுத்தது போலாகும் என்ற பயம் மேலிடுகிறது. சேர்ந்தோம், இருந்தோம், பிரிந்தோம் என்பதின் அழகியல் வெளிப்பாடு இது: " மரத்துக்கும் மரத்துக்குமான பாவுதலைப்போல் இருக்கவில்லைஒரு கிளைக்கும் இன்னொன்றுக்கும்வேர்களை முறுக்கிவிட்டது போன்றதிரட்சியில் நானும் நீயும்ஒருக்களித்த காலத்தை முன்பல்லில்கொறித்துக் காட்டும் அணில்அருந்துயர் கழிதலில் விட்டுச்செல்லும்முன்கதைகளைக் கூடுதாவும்குரங்கின் வால் மதப்புற்று … Continue reading சொல்லில் சரியும் சுவர்கள் – ரிஸ்மியா யூசுப்:
கடல் முற்றம் – ஃபாயிஸா அலி:
ஆசிரியர் குறிப்பு: இலங்கை திரிகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்தவர். விஞ்ஞான ஆசிரியராக அரசுப் பள்ளியில் பணிபுரிவதோடு, ஊடகத்துறையிலும் இயங்கி வருகிறார். இவரது மூன்று நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது நான்காவது. கவிதைத்தொகுப்பு. பர்தா ஒரு அடக்குமுறை. அது உடையல்ல. பாதிக்கப்பட்ட எத்தனையோ நாடுகளின் பெண்கள் இதைச் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் வெப்பப் பிரதேசமான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இன்னும் சிரமம். ஆனால் ஒரு பெண், அதை அணிவதைப் பாதுகாப்பாக உணர்கிறேன் என்று சொல்கையில் மற்றவர் யாரும் அது … Continue reading கடல் முற்றம் – ஃபாயிஸா அலி:
புத்தனின் கடைசி முத்தம் – லஷ்மி
ஆசிரியர் குறிப்பு; கடப்பாக்கத்தில் பிறந்தவர், சென்னையில் வசிப்பவர். அரசு அலுவலர். இவரது கவிதைகள் பல இதழ்களில் வெளியாகி உள்ளன. இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. சிறகுகள் வெட்டப்படுவது எப்போதும் பெண்களுக்கே நேர்கிறது. மீறிப் பறந்தாலும் வானத்தில் வல்லூறுகளால் அபாயம். பறக்காமல் சிறகுகளைப் பத்திரப்படுத்தி வைப்பதைச் சொல்கிறது இந்தக்கவிதை. A ship in harbor is safe, but that is not what ships are built for. " என் சிறகுகளைப் பழுதுபார்த்துக்கொள்கிறேன்.ஒவ்வொரு இறகையும்தூய்மைப்படுத்திக் … Continue reading புத்தனின் கடைசி முத்தம் – லஷ்மி
கனவுப்பிரதிமை – விஜி வெங்கட்:
ஆசிரியர் குறிப்பு: புதுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,, ஹைதராபாத்தை வாழ்விடமாகவும் கொண்டவர். பட்டிமன்றங்கள், சொற்பொழிவு வாயிலாகப் பரவலாக அறியப்பட்டவர். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. நாட்காட்டியில் ஒவ்வொரு நாளும் தாளைக் கிழிக்கையில், இன்று ஆயுளில் ஒரு நாள் குறைந்தது என்ற எண்ணம் பொதுவாக வருவதில்லை. இன்று சாயங்காலம் அவன் வருவான், நாளை பிறந்தநாள் பார்ட்டி என்று மனது எப்போதும் முன்னோக்கித் தாவுவதில், கழித்தல் கணக்கு புரிவதில்லை. " செய்யப்படாததும்செய்தும் பிடிபடாததும்மனதில் சரியாகப் பதியய்யடாததுமாய்காலத்தைக் கிழித்துக் கொண்டுபின்னோக்கிச் செல்கிறதுவிடை மட்டும் … Continue reading கனவுப்பிரதிமை – விஜி வெங்கட்:
உன் கிளையில் என் கூடு – கனகா பாலன்:
ஆசிரியர் குறிப்பு: திருவேங்கடத்தில் பிறந்தவர். சென்னையில் வசிப்பவர். வாசித்தலிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். இது இவரது மூன்றாவது கவிதைத் தொகுதி. காற்றைக் குடித்துப் பெருமாளை சேவிப்பவன் என்று சொல்வார்கள் ஈயாக் கஞ்சர்களைத் திருநெல்வேலிப்பக்கம். ஒரு நேரம் கூட வயிறு நிறையாத பகல்கள் நிரம்பியவளுக்கு விடியல் எப்போதும் பயத்தை அளிப்பது. " முவ்வேளைக்கு ஒருவேளையேனும்சாந்தப்படுத்தமுழுநாளையும் காவுவாங்கிமுழுமை கொள்ளாது தவிக்கிறதுஅவளின் நாட்கள்…..விடியலின் கணக்குக்கு விடையாகசூரியஒளியை மட்டும் சொன்னால் எப்படி" இயற்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு முற்றத்தில் இருக்கும் மரமே மூலவர். மழைத்தண்ணீர் … Continue reading உன் கிளையில் என் கூடு – கனகா பாலன்:
என் கடலுக்கு யார் சாயல் – தீபிகா நடராஜன்:
ஆசிரியர் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார். படைப்பு, புரவி உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் எழுதிய இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது. இவரது கடலுக்கு யார் சாயல் என்பது தெரியாது, ஆனால் தீபிகாவின் கவிதைகளுக்கு குழந்தைமையின் சாயல்.சிறுகதைகளோ, கவிதைகளோ ஏதோ ஒன்றில் நம்மைத் தொலைக்க முடிந்தால் போதும், என்றேனும் நம்மாலும் சிறப்பாக எழுத முடியும். வாசிப்பும், பயிற்சியும் தூக்கிச் செல்லும் தூரம் கற்பனைக்கெட்டாதது. எழுத உட்காருமுன் யோசிக்காத பலவும் … Continue reading என் கடலுக்கு யார் சாயல் – தீபிகா நடராஜன்:
செருந்தி – ரம்யா அருண்ராயன்:
ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இயற்பியலுக்கும் எனக்கும் நான் திருமணம் செய்யும் வரை ஸ்நானப்ராப்தி கூட இல்லை. இப்போது இயற்பியல் முப்பது வருடங்களுக்கு மேலாக என்னுடன் குடும்பம் நடத்தி வருகிறது. இலக்கியம் படித்தவர்களே நல்ல கவிதை எழுத முடியும் என்று ஒரு கற்பிதம், சொன்ன வரிகளின் சுடுகாற்று ஆறுமுன்னே நமக்குமறந்து போகும் … Continue reading செருந்தி – ரம்யா அருண்ராயன்:
கண்மாய்க்கரை நாகரீகம் – சமயவேல்:
ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், வெம்பூர் கிராமத்தில் பிறந்தவர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், மொழிபெயர்ப்பாளர். ஏழு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரது எட்டாவது கவிதைத் தொகுப்பு இது. சமயவேல் சிறந்த வாசகரும் கூட. இவர் மொழிபெயர்ப்பில் நாவலும், கவிதைத் தொகுப்புகளும் வந்திருக்கின்றன. சுயசரிதைக் கூறுகள் கொண்ட நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். என்றாலும், ஒருவரை முதன்முதல் பார்த்த போது நாம் பேசிய மொழியிலேயே தொடர்வது போல, இவரை கவிஞர் என்றே என்னால் உடன் அடையாளம் … Continue reading கண்மாய்க்கரை நாகரீகம் – சமயவேல்:
ஒரு பிடி நிழல் – ஜி.பி. இளங்கோவன்:
ஆசிரியர் குறிப்பு: கும்பகோணம், அம்மாசத்திரத்தில் பிறந்து வளர்ந்தவர். இளங்கலை வணிகம் பயின்றவர். தீவிர வாசகர். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. தொடர்ந்து கவிஞர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், கவிதைகளை வாசிப்பவர்கள், கவிதைத் தொகுப்பு கொண்டு வர விரும்புதல் இயல்பு. ஆனால் அதற்காகக் கிட்டத்தட்ட ஐம்பது வயது ஆகும் வரைக் காத்திருப்பது இயல்பான விஷயமில்லை. காத்திருப்பு, அனுபவம் இரண்டும் மொழியை பண்படுத்தி, கூர்மையாக ஆக்கியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். தொகுப்பின் மொத்தக் கவிதைகளில் ஒரு பக்கத்தைத் தாண்டிய கவிதை … Continue reading ஒரு பிடி நிழல் – ஜி.பி. இளங்கோவன்: