கண்மாய்க்கரை நாகரீகம் – சமயவேல்:

ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், வெம்பூர் கிராமத்தில் பிறந்தவர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், மொழிபெயர்ப்பாளர். ஏழு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரது எட்டாவது கவிதைத் தொகுப்பு இது. சமயவேல் சிறந்த வாசகரும் கூட. இவர் மொழிபெயர்ப்பில் நாவலும், கவிதைத் தொகுப்புகளும் வந்திருக்கின்றன. சுயசரிதைக் கூறுகள் கொண்ட நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். என்றாலும், ஒருவரை முதன்முதல் பார்த்த போது நாம் பேசிய மொழியிலேயே தொடர்வது போல, இவரை கவிஞர் என்றே என்னால் உடன் அடையாளம் … Continue reading கண்மாய்க்கரை நாகரீகம் – சமயவேல்:

ஒரு பிடி நிழல் – ஜி.பி. இளங்கோவன்:

ஆசிரியர் குறிப்பு: கும்பகோணம், அம்மாசத்திரத்தில் பிறந்து வளர்ந்தவர். இளங்கலை வணிகம் பயின்றவர். தீவிர வாசகர். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. தொடர்ந்து கவிஞர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், கவிதைகளை வாசிப்பவர்கள், கவிதைத் தொகுப்பு கொண்டு வர விரும்புதல் இயல்பு. ஆனால் அதற்காகக் கிட்டத்தட்ட ஐம்பது வயது ஆகும் வரைக் காத்திருப்பது இயல்பான விஷயமில்லை. காத்திருப்பு, அனுபவம் இரண்டும் மொழியை பண்படுத்தி, கூர்மையாக ஆக்கியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். தொகுப்பின் மொத்தக் கவிதைகளில் ஒரு பக்கத்தைத் தாண்டிய கவிதை … Continue reading ஒரு பிடி நிழல் – ஜி.பி. இளங்கோவன்:

ஆண்களின் கனிவான கவனத்திற்கு – ஜே.மஞ்சுளா தேவி:

எனது முன்னுரை: நம் மண்ணுக்கு மட்டுமே பொருந்தும் விஷயங்கள் பேசி மாளாதவை. அப்பத்தா, பெரியம்மா, அத்தைகள், அண்ணிகள் என்று நிறைந்தது நம் உலகம். மேலைநாடுகளில் இவை வெறும் பெயர்கள். அத்தை வந்து இந்த மாசம் புருஷன்கூட சேரக்கூடாது என அறிவுரை சொல்லும் உலகம் நம்முடையது. அப்பா அம்மாவிடம் இன்று இரவு வீட்டுக்கு வரலாமா என்று கேட்டுவிட்டுச் செல்லும் நாசூக்கு கொண்டவர்களால் நம்முலகை புரிந்து கொள்வது சாத்தியமில்லை. பெண்கள் அதக்கி முழுங்கக் காலங்காலமாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பத்திருபது வருட … Continue reading ஆண்களின் கனிவான கவனத்திற்கு – ஜே.மஞ்சுளா தேவி:

நரகத்தின் உப்புக்காற்று – அய்யப்ப மாதவன்:

ஆசிரியர் குறிப்பு: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். இதுவரை பதினைந்து கவிதை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு முதலியவற்றைக் கொண்டு வந்திருக்கிறார். நான்கு குறும்படங்களை இயக்கியுள்ளார். இது சமீபத்தில் வெளியான கவிதை நூல். அய்யப்ப மாதவனின் ஆரம்பகாலக் கவிதைகளுக்கும் இந்தத் தொகுப்புக்கும் ஏராளமான வித்தியாசங்கள். புத்தன் அடிக்கடி வருகிறான். காதலில் கூட காத்திருக்கத் தயாராக இருக்கும் அகிம்சாவாதி வந்திருக்கிறான். எனக்குப் பிடித்த மாதவன் யாமினி எழுதிய மாதவன். விடாது துரத்திக் காதல் … Continue reading நரகத்தின் உப்புக்காற்று – அய்யப்ப மாதவன்:

ஆத்மாநாமின் கடவுள் – ஜி.சிவக்குமார்:

ஆசிரியர் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு நீர்வளத்துறையில்உதவி இயக்குனர். முகநூல் பக்கத்தில் இவர் எடுத்து, வெளியிடும் புகைப்படங்கள் இவரை எல்லோருக்கும் நெருங்கியவர் ஆக்கி விடும். இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. பெண்கள் எப்போது அழகாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளக் கொஞ்சம் அனுபவசேகரம் கையிருப்பில் இருக்க வேண்டியதாகிறது. புறஅழகில் மயங்கியதெல்லாம் பொய்யென்று ஆகிறது. " இப்படி நடு ரோட்ல உதிர்த்திருக்கயேஉனக்கு அறிவிருக்கா?உன்னெதிரே தலை குனிந்து நிற்கிறதுஅத்தனை பெரிய … Continue reading ஆத்மாநாமின் கடவுள் – ஜி.சிவக்குமார்:

ஒரு பகல் ஒரு கடல் ஒரு வனம் – கயூரி புவிராசா:

ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர். கல்லூரிகாலத்தில் இருந்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எழுதிவரும் இவரது முதல் கவிதைத்தொகுப்பு இது. காதலில் துணையை விட, காதலிக்கிறோம் அல்லது காதலிக்கப்படுகிறோம் என்ற உணர்வே, காதலின் சுவையைக் கூட்டுகிறதாக நினைக்கிறேன். லோகாதய வாழ்க்கையின் நிர்பந்தங்கள் அதில் இல்லை. அது ஒரு கனவுநிலை. கயூரியின் கவிதைகள் காட்சிப்படிமங்கள் காட்டும் வர்ணஜாலங்கள். காதலை, காமத்தைச் சொல்ல விழையும் பல கவிதைகளிலும், அகஉணர்வைச் சொல்வதற்குப் புறக்காட்சிகளைப் பயன்படுத்தி இருக்கிறார். " பவளமல்லி சிவப்புகளில்நுரையீரல் நிறைக்கும் காற்றுமருதமர … Continue reading ஒரு பகல் ஒரு கடல் ஒரு வனம் – கயூரி புவிராசா:

கோதமலை குறிப்புகள் – கண்ணன்:

ஆசிரியர் குறிப்பு: சேலம் தாரமங்கலத்தில் வசிக்கிறார். பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இது இவரது முதல் தொகுப்பு. கண்ணனின் கவிதைகள் பெரும்பாலும் ஒரு கதையைச் சொல்கின்றன. வாழ்வியல் அனுபவங்கள் சிதறல்களாகின்றன. பேச்சு மொழியை கவிதைகளுக்குப் பயன்படுத்துகையில், அனுபவங்களின் ஆழமும், உணர்வின் தாக்கமும் தூக்கலாக இல்லாவிட்டால் செய்திக்குறிப்பாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. கண்ணன் கவிதைகளுக்கு அந்த விபத்து நேரவில்லை. கண்ணில்லாத அத்தை, அம்மாவுடன் விடாத சண்டையும் அப்பாவிடம் விட்டுக் கொடுக்கும்சண்டையும் செய்பவள் என்று அவள் குறித்த … Continue reading கோதமலை குறிப்புகள் – கண்ணன்:

கனவின் துடுப்பு – சங்கமித்ரா:

ஆசிரியர் குறிப்பு: கோவையில் வசிப்பவர். தமிழ் உட்பட இரண்டு பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. பேசுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு, ஒதுங்கிப் போவோரிடம் எல்லாம் இனம்புரியாத சிநேகிதம் தொற்றிக் கொள்கிறது. மௌனம் இயலாமையைக் குறிக்கலாம், ஆனால் அது தான் நாம் என்னும் போது, வேறு என்ன செய்வது? " அடைமழை எனப் பொழிய வேண்டியநேரங்களில் கானல்நீரைத்தேர்ந்தெடுக்கிறேன்வாயாடி ஓய்கிறேன்கனவு உலகில்கவிதை நடையாய்உதடுகளை ஊசியால் கோர்க்கிறேன்நனவு உலகில்தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான விடையாய்வார்த்தைகளை விழுங்கி விழுங்கிகனத்து இருக்கிறதுநெஞ்சு ஈரல்………" … Continue reading கனவின் துடுப்பு – சங்கமித்ரா:

கற்கை – அகச்சேரன்:

ஆசிரியர் குறிப்பு: சேலத்தைச் சேர்ந்த அகச்சேரன் கவிதை எழுதுவதோடு ஓவியம் வரைவதிலும் நாட்டமுள்ளவர். இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இது சமீபத்தில் வந்த மூன்றாவது கவிதைத் தொகுப்பு. நல்லவன் என்ற பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் யத்தனங்கள் மிகக் கடினமானவை. You are the most beautiful woman I have seen on the earth என்று ஒரு பெண்ணிடம் சொல்லிப் பாருங்கள், அவள் தன்னை எத்தனை அலங்கரித்தாலும் திருப்தி கொள்வதில்லை. " நீர்மம் பூத்துக் … Continue reading கற்கை – அகச்சேரன்:

லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்-, இன்பா:

ஆசிரியர் குறிப்பு: தஞ்சாவூரில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசித்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிகிறார். இதுவரை இவரது மூன்று கவிதைத் தொகுப்புகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழிலக்கியத்தின் எல்லைகளை அகலப்படுத்துகிறார்கள் என்று சொல்வதை மறுபடிமறுபடி இது போன்ற நூல்கள் மெய்ப்பிக்கின்றன. இவர் பார்த்த சிங்கப்பூரின் வாழ்வியலைக் கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார். அது ஒரு பயணியின் பார்வையையும் தாண்டிப் பயணிப்பது இந்தக் கவிதைகளின் தனிச்சிறப்பு. சிங்கப்பூரில் இருந்து ஐந்து மணிநேரத்திற்கும் குறைவான … Continue reading லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்-, இன்பா: