சிதைமுகம் – க.சி. அம்பிகாவர்ஷினி:

ஆசிரியர் குறிப்பு: மதுரையைச் சேர்ந்தவர். கவிஞராக எல்லோருக்கும் அறிமுகமானவர். தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம், இந்த இரவு ஒரு சிறிய நூலகம்ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதற்குமுன் வெளியாகியுள்ளன. இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் எல்லாமே பெண்களின் குரல்கள். மையக்கதாபாத்திரம் பெண் என்பதால் மட்டுமல்ல, முழுக்கவே அகவயப்பட்ட பெண்களே இந்தக் கதைகளில் வருகின்றார்கள். கதைகள் முழுக்க நடந்து கொண்டோ, பயணித்துக் கொண்டோ இருக்கிறார்கள். உள்ளுக்குள்ளும், உடலுக்கும் ஒரு அலைச்சல் இருந்து கொண்டே இருக்கின்றது. … Continue reading சிதைமுகம் – க.சி. அம்பிகாவர்ஷினி:

மரமல்லி- பொன்.விமலா:

ஆசிரியர் குறிப்பு: ராணிப்பேட்டை, அவரைக்கரை கிராமத்தில் பிறந்தவர். பத்திரிகையாளர். ஊடகவியலாளர். இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. பொன்.விமலாவின் இந்தத் தொகுப்பை வாசித்ததும், முதலில் தோன்றியது, இதைத் தான் எழுத வேண்டும் என்ற, கூண்டுக்குள் மாட்டிக் கொள்ளாத, தயக்கமில்லாத எழுத்து. அதற்கேற்றாற்போல் இந்த மொழிநடையில் இருக்கும் வேகம். தங்கு தடையில்லாத மொழிநடை. நகரத்துக் கதைகளும், கிராமத்துக் கதைகளும் அதே Aurhenticityயுடன் இருக்கின்றன. பலிபீடம், தீட்டு, டிங் டாங் பெல், ரெய்ன் கிஸ் ஆகிய கதைகள் தொகுப்பில் எனக்குப் … Continue reading மரமல்லி- பொன்.விமலா:

விறலி – ச.வி.சங்கரநாராயணன்:

ஆசிரியர் குறிப்பு: திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள காணக்கிளிய நல்லூர் இவரது ஊர். மனிதவளத்துறையில் பணிபுரிகிறார். இவரது கதைகள் பல இணைய இதழ்களில் வெளியாகி உள்ளன. இது இவருடைய முதல் தொகுப்பு. சங்கரநாராயணின் கதைகள் பெண்களின் உலகத்தால் நிரம்பியிருக்கின்றன. நல்லவர்கள், கெட்டவர்கள், அப்பாவிகள், அபலைகள் என்று எந்த சட்டகத்துக்குள்ளும் அடைக்க முடியாத பெண்கள் என்பது குறிப்பித்தக்க விஷயம். ஆனால் இவரது கதைகளில் வரும் ஆண்களை அப்படிச் சொல்ல முடியாது. சில கதைகளுக்கு Open ending வைத்திருக்கிறார். முதல் … Continue reading விறலி – ச.வி.சங்கரநாராயணன்:

நூற்றி முப்பத்தொரு பங்கு – ரமேஷ் ரக்சன்:

ஆசிரியர் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர். MBA பட்டதாரி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பு. எல்லாக் கதைகளுமே இவர் முன்னுரையில் கூறியிருப்பது போல ஊர்க்கதைகள். கோபாலு என்ற ஒரு பெயரினால் மட்டுமல்ல, சில கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது போலிருப்பதன் காரணம் இவை ஒரே ஊரின் மாந்தர்கள். ஜாதிப்பிரிவினை நகரங்களில் நீறுபூத்த நெருப்பாக இருப்பது போலல்லாது கிராமங்களில் சுடர்விடும் தீயாகவே இருக்கிறது. உடல்வேட்கைக்குப் பார்க்காத ஜாதி, … Continue reading நூற்றி முப்பத்தொரு பங்கு – ரமேஷ் ரக்சன்:

பிரேமகலகம் – சப்னாஸ் ஹாசிம்:

ஆசிரியர் குறிப்பு: கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். பொறியியலாராகத் துபாயில் பணி. வனம் இணையஇதழ் ஆசிரியர்களில் ஒருவர். ஏற்கனவே இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன, ,இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பை Kids gloveஉடன் அணுக வேண்டிய தேவையில்லை என்று சொல்லிக் கொண்டு வருகின்ற தொகுப்புகள் குறைவு.துபாயில் வசித்தாலும் இவரது கதைகள் இலங்கை இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைச் சுற்றியே மையம் கொண்டிருக்கின்றன. அடர்ந்து செறிந்த மொழியும், அதைக் கொண்டு மொழிநடையை ஒரு Forceஆக மாற்றுவதும்சப்னாஸின் … Continue reading பிரேமகலகம் – சப்னாஸ் ஹாசிம்:

சிருங்காரம் – மயிலன் ஜி சின்னப்பன்:

ஆசிரியர் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர். அறுவைசிகிச்சை நிபுணர். ஒரு நாவல், ஒரு குறுநாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்தவை.இது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. அநேகமாக எல்லா சிறுகதைத் தொகுப்பிலுமே இவர் அசோகமித்திரன், ஆதவன் இருவரையும் நினைவுகூர்வதாக ஞாபகம். அதைத் தனியாகக் குறிப்பிட வேண்டுமா என்ன? இவரது எழுத்தில் அவர்கள் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள். இருவரிடமிருந்தும் விலகிய கதைக்களங்கள் மயிலனுடையவை, மொழிநடையும் இவருடைய தனித்துவம் தொனிப்பது, ஒருவேளை வார்த்தைகளின் நுட்பங்களில் … Continue reading சிருங்காரம் – மயிலன் ஜி சின்னப்பன்:

கற்றாழை – ஐ. கிருத்திகா:

ஆசிரியர் குறிப்பு: திருவாரூர் மாவட்டம், திருப்பேருவேளூர் என்கின்ற மணக்கால் அய்யம்பேட்டை இவரது சொந்த ஊர். இருபது வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறார். ஏற்கனவே இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வெளிவந்த நான்காவது சிறுகதைத் தொகுப்பு. கிருத்திகாவின் கதைகள், பெண்களின் உலகை, குறிப்பாக நடுத்தரவயதுப் பெண்களின் உலகைத் திரைவிலக்கிக் காட்டுபவை. பெண்கள் அவர்களுக்குள் பேசும் பேச்சுகள் மட்டுமன்றி அவர்களது அகஉணர்வுகளை, அலைபாய்தல்களை துல்லியமாகச் சித்தரிப்பவை. இவரது இன்னொரு பலம் விவரணைகள். எடுத்துக் கொண்ட கதையை … Continue reading கற்றாழை – ஐ. கிருத்திகா:

பருந்து – அமுதா ஆர்த்தி:

ஆசிரியர் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், ,வில்லுக்குறி பேரூராட்சி, கொல்லாஞ்சிவிளையில் வசிப்பவர். பல இதழ்களில் இவரது கதைகள் வெளியாகி இருக்கின்றன. இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. நாஞ்சில் மொழியுடன் தொடர்ந்து எழுத்தாளர் வருகை சமீபத்தில் நேர்ந்து கொண்டிருக்கிறது, இம்முறை ஒரு பெண்.அமுதா ஆர்த்தியின் கதைக்களங்கள் வித்தியாசமானவை. 'நெகிழிக்கனவு' பேசும்படத்தை நினைவுறுத்திய போதிலும் எளிதாக அது சொல்லவந்த விஷயத்தை முனைப்புடன் சொல்வதால் மாறுபட்டு நிற்கிறது. அவளது உடைமரக்காடும் வெட்டுக் கத்தியும் கதையை யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கக் கூடும். ஆனால் … Continue reading பருந்து – அமுதா ஆர்த்தி:

ராம மந்திரம் – வைரவன் லெ.ரா:

ஆசிரியர் குறிப்பு: நாகர்கோயில், ஒழுகினசேரியில் பிறந்தவர். பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். பட்டர்-பி என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் வரும் இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. தெரிந்தோ அல்லது யதேச்சையாகவோ ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கதைகள் நிறையவே இருக்கின்றன இந்தத் தொகுப்பில். அனுமாரே இரண்டு கதைகளில் வருகிறார். இயேசு சில கதைகளில். நம் பாவத்தையெல்லாம் கடவுள் சுமப்பார், எனவே பயப்படாமல் பாவம் செய் என்று ஜான் இன்ஸ்பெக்டர் சொல்வதையும் உண்மையில் யோசித்துப் பார்க்கலாம். 'இறைவன்' … Continue reading ராம மந்திரம் – வைரவன் லெ.ரா:

முரட்டுப்பச்சை – லாவண்யா சுந்தரராஜன்:

ஆசிரியர் குறிப்பு: திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தவர். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இதற்கு முன் நான்கு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவல் முதலியன வெளியாகியுள்ளன. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இரண்டு வருடங்கள் முன்பு லாவண்யா என்னிடம் தகவல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட தமிழ் படைப்புகள் குறித்துக் கேட்டபோது உப்புக்குச் சப்பாணியாய் ஒன்றிரண்டு நூல்களைச் சொன்ன நினைவு. துறைசார்ந்த எழுத்துகள் தமிழில் எப்போதும் குறைவு. இங்கே … Continue reading முரட்டுப்பச்சை – லாவண்யா சுந்தரராஜன்: