ஆசிரியர் குறிப்பு: திருவாரூரைச் சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் ஃபிளாரிடா மாகாணத்தில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தும் இவர் கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர். என் ஜன்னல் வழிப்பார்வையில், பங்களா கொட்டா,வனநாயகன்-மலேசிய நாட்கள், Social media குறித்த இருநூல்கள் முதலியன ஏற்கனவே வெளிவந்த இவரது நூல்கள். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவல். பெயர் சொல்லாத கதைசொல்லி, காதலித்தவளை மணக்காமல், தாயார் ஏற்பாடு செய்த பெண்ணை மணந்து, பின் அவளையும் … Continue reading ஜெஸி (எ) ஜெஸிகா கிங் – ஆரூர் பாஸ்கர்:
தேவிபாரதியின் நாவலுலகம்:
நன்றி சமயவேல் சார். நன்றி தமிழ்வெளி. தி.ஜாவின் நாவல்களில் அமிர்தம், அன்பே ஆருயிரே தவிர மற்ற எல்லா நாவல்களிலிருந்தும் ஒன்றை அவரது மாஸ்டர்பீஸ் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கரம்சோவ் சகோதரர்களா இல்லை குற்றமும் தண்டனையுமா என்று கேட்டால் என்ன சொல்வது? நல்ல எழுத்தாளர்கள் எல்லோருக்குமே நேர்வது இது. தேவிபாரதியின் இதுவரை வெளிவந்த நான்கு நாவல்களில், நிழலின் தனிமை மாஸ்டர்பீஸ் என்று தமிழ் விக்கிப்பீடியா சொல்கிறது. நட்ராஜ் மகராஜ் என்று சொல்வோரும் உள்ளனர். நொய்யல் வெளிவந்ததும், அதுவா இல்லை … Continue reading தேவிபாரதியின் நாவலுலகம்:
அதர் இருள் – அகரன்:
ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தற்போது பிரான்ஸில் வசிப்பவர். தொடர் வாசிப்பிலும், வாசித்ததைப் பகிர்தலிலும் ஆர்வம் கொண்டவர். இவருடைய சிறுகதைத் தொகுப்பு மற்றும் அதர் இருள் எனும் இந்த நாவல் இரண்டுமே சமீபத்தில் வெளியானவை. வெவ்வேறு நாடுகளில், வேற்றுக் கலாச்சாரங்களின் இடையே வாழ்பவர்கள், தமிழில் புனைவின் எல்லையை அதிகரிக்கிறார்கள் என்பது பலமுறை சொன்னது. Wikipedia எடுத்தாளர்களால் இதைச் செய்ய முடியாது, செய்தாலும் தேன்குழல் செய்யுமுன் மாவில் பிடித்துவைத்த பிள்ளையாருக்கு குரங்கின் சாயல் வந்தது போல் இருக்கும். 1986ல் … Continue reading அதர் இருள் – அகரன்:
எதிர்க்கரை – யுவன் சந்திரசேகர் :
ஆசிரியர் குறிப்பு: சோழவந்தான் அருகிலுள்ள கரட்டுப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் இவர் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்றவர். கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புத் தொகுப்புகளுடன் இதற்கு முன் ஒன்பது நாவல்களை எழுதியுள்ள இவரது பத்தாவது நாவல் இது. திபெத்தில் யாரோ எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பு என்று திசைதிருப்பலுடன் ஆரம்பிக்கும் நாவல், பூமியின் வெவ்வேறு பகுதியில் பிறந்து வளரும், இரண்டு வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கும், இருவரின் நனவோடைப் பயணமே இந்த நூல். இருவருக்கும் பிறப்பாலோ, உறவாலோ … Continue reading எதிர்க்கரை – யுவன் சந்திரசேகர் :
வேங்கை வனம் – எம். கோபாலகிருஷ்ணன் :
ஆசிரியர் குறிப்பு: திருப்பூரில் பிறந்தவர். கோயம்பத்தூரில் காப்பீட்டு அதிகாரியாகப் பணிபுரிகிறார்.இந்தி முதுகலைப்பட்டம் பெற்றவர். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நாவல்கள் என்று கடந்த இருபது வருட.களுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருகிறார். இது சமீபத்திய நாவல்.கோபாலகிருஷ்ணனை வாசிக்காதவர்கள் அவரது மணற்கடிகை நாவலில் இருந்து தொடங்கவாம். Ken Folletன் Kingsbridge seriesல் இதுவரை நான்கு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன, அடுத்தது வரும் செப்டம்பரில் வெளியாகிறது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள். ஆயிரத்தைநூறு வருட மேற்கத்திய நாகரீகத்தைச் சொல்லும் Series. இது ரந்தம்பூர் … Continue reading வேங்கை வனம் – எம். கோபாலகிருஷ்ணன் :
கோசலை – தமிழ்ப்பிரபா:
ஆசிரியர் குறிப்பு: சென்னை சிந்தாதிரிப் பேட்டையைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆனந்தவிகடனில் சிலகாலம் பணிபுரிந்து பின் தற்போது திரைப்படங்களில் கதாசிரியராக, வசனகர்த்தாவாகப் பணிபுரிகிறார். 'பேட்டை' நல்ல வரவேற்பு பெற்ற இவரது முதல்நாவல். அசடு நாவலின் கணேசனை யாரும் மறக்க முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சகல அவமானங்களையும் சந்தித்து, அநாதையாய் இறந்து போகிறவன். இந்த நாவலின் மையக்கதாபாத்திரம், கோசலை மூன்றடி உருவம், போறாததுக்கு முதுகில் கூன். கணேசனைப் போலவே பெற்றோர், உறவினர், உடன் பிறந்தான், சமூகம் என எல்லோராலும் … Continue reading கோசலை – தமிழ்ப்பிரபா:
மானசா – லஷ்மி பாலகிருஷ்ணன் :
ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வரும் இவர் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆனந்தவல்லி சிறந்த வரவேற்பைப் பெற்ற வரலாற்று புதினம். இது இவரது இரண்டாவது நாவல். நூலிலிருந்து: " காலச்சக்கரம் மாயத்திறன் கொண்டது. அழிவை அறியாதது. அனைத்து உயிரினங்களின் செயல்களுக்கான பலனை முடிவு செய்வது அந்தக் காலச்சக்கரமே. ஒரு போதும் அயராமல் சுழலும் அந்தச் சக்கரத்தின் சுழற்சியே … Continue reading மானசா – லஷ்மி பாலகிருஷ்ணன் :
காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல் பதிப்பிற்கான முன்னுரை:
தமிழில் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் என்ற இரண்டு வடிவங்களிலும் சிறந்த பங்களிப்பை அளித்தவர்கள் என்று பட்டியலிட்டால், விரல்விட்டு எண்ணி விடலாம். சா.கந்தசாமி அதிகம் ஆரவாரமின்றித் தன்னுடைய தடங்களைத் தமிழிலக்கியப் பரப்பில் பதித்துச் சென்றவர். கதைகளல்லாத கதைகள் என்று சா.கந்தசாமியின் சிறுகதைகளைச் சொல்வார்கள். பெரும்பாலான கதைகளை பின்னாளில் அவர் அப்படி எழுதியிருந்தாலும், 'தக்கையின் மீது நான்கு கண்கள்' போன்ற சிறந்த கதையம்சம் கொண்ட சிறுகதைகளையும் அவர் அதிகமாகவே எழுதியிருக்கிறார். சா.கந்தசாமியின் முக்கியமான நாவல்களைப் பட்டியலிடுவோர் தவறாமல் குறிப்பிடுபவை, சாயாவனம், … Continue reading காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல் பதிப்பிற்கான முன்னுரை:
காந்தப்புலம் – மெலிஞ்சி முத்தன்:
ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணம், மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிப்பவர். முட்களின் இடுக்கில், வேருலகு, பிரண்டையாறு, அத்தாங்கு, உடக்கு முதலியன இவரது முந்தைய படைப்புகள். இது இவரது சமீபத்திய நாவல். ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று சிறுவயதில் கேட்ட கதைகளில் இருந்து, தமிழில் கதைசொல்லல் வெகுதூரத்திற்குப் பயணம் செய்து வந்து விட்டது. போருக்கு முன்னும், பின்னுமான இலங்கையில் நடக்கும் கதை, ஆனால் போர் குறித்த ஒரிரு வரிகளும், தெருமுனையில் வெடித்த ஓலைப்பட்டாசு போல் … Continue reading காந்தப்புலம் – மெலிஞ்சி முத்தன்:
பர்தா – மாஜிதா:
ஆசிரியர் குறிப்பு: இலங்கையின் ஒட்டமாவடியில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசித்துக் கொண்டு, சட்டத்துறையில் பணியாற்றுகிறார். இவரது சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இது இவரது முதல் நாவல். ஒரு பழுத்த ஆன்மிகவாதி கடவுளை எவ்வளவு தீர்க்கமாக நம்புகிறானோ, அதே தீர்க்கத்துடன் கடவுள் இல்லை என்பதை நான் நம்புகிறேன். மதங்கள் மனிதநேயத்தை அழிக்கும் பெருநோய்கள். நான் பிறந்த மதத்தில் ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு அடுத்த மதத்தை விமர்சிக்கும் நோக்கம் எப்போதும் எனக்கில்லை. இலக்கியத்தையும் … Continue reading பர்தா – மாஜிதா: