தஸ்தயெவ்ஸ்கி, ரா.கிருஷ்ணையா இருவருமே தமிழ் வாசகர்களுக்குப் பலமுறை அறிமுகமானவர்கள். இந்தக்கதை ஆங்கிலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழிலும் கூட இதே கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் 'அருவருப்பான விவகாரம்' என்ற பெயரில் நியுசெஞ்சுரி மற்றும் ஆதி பதிப்பகம் வெளீயீடாக வந்தது. லேபிள்கள் மாறிய போதும், பழைய ஒயினின் போதை அப்படியே இருக்கின்றது. இந்தக்கதை ருஷ்யப்புரட்சிக்கு ஐம்பது வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. கதையில் புரட்சி வெடிக்கப்போகும் அறிகுறிகளை தஸ்தயெவ்ஸ்கி கோடிட்டுக் காட்டியிருக்கிறார் கதைகளில் வரும் இளைஞர்கள் மூலமாக. மூன்று … Continue reading விரும்பத்தகாத சம்பவம் – ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி – தமிழில் ரா.கிருஷ்ணையா:
சொல்லக்கூடாத உறவுகள் – சூசன் ஹாதோர்ன்- தமிழில் சசிகலா பாபு:
ஆசிரியர் குறிப்பு : சென்னையில் பிறந்து அங்கேயே வசிப்பவர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஏழு மொழிபெயர்ப்புகள் இதுவரை வெளிவந்த இவரது நூல்கள். இது இவரது எட்டாவது மொழிபெயர்ப்பு நூல். தேசிக்கு அவளது சித்தி வீட்டை மட்டுமின்றி நாட்குறிப்புகளையும், சில புத்தகங்களையும் விட்டுச் சென்றிருக்கிறாள். ஏராளமான பேப்பர், புத்தகங்களை பின்னறையில் போட்டு வைத்த தேசி, கிட்டத்தட்ட அவற்றைக் குப்பையில் எறிந்திருக்கக்கூடும். யதேச்சையாக ஒரு சில பக்கங்களைப் படித்தபிறகே அது சித்தி கேத்தின் கதை என்பது தெரிகிறது. … Continue reading சொல்லக்கூடாத உறவுகள் – சூசன் ஹாதோர்ன்- தமிழில் சசிகலா பாபு:
கடவுளுக்கென ஒரு மூலை – அனுராதா கிருஷ்ணசாமி :
ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து, தில்லி, மும்பை போன்ற நகரங்களில் வசித்தவர். மத்தியஅரசின் நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகித்தவர். தீவிர வாசகர். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூல், பலவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாகப் பணி ஓய்வுபெற்று, பல வருடங்கள் கழித்து அனுராதா, தன் முதல் மொழிபெயர்ப்புத் தொகுப்பின் மூலம் எழுத்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். இரண்டாவது, இவை அனைத்துமே இந்திய மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை. கடைசியாக இதில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் அனைவரும் … Continue reading கடவுளுக்கென ஒரு மூலை – அனுராதா கிருஷ்ணசாமி :
புதுவை என்னும் புத்துணர்வு – என்.சந்தியா ராணி- கன்னடத்தில் இருந்து தமிழில் கே.நல்லதம்பி:
என்.சந்தியா ராணி: எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வரலாறு, இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.ஊடகங்களில் பணியாற்றியவர். இதுவரை ஒன்பது நூல்களை எழுதிய இவரது சமீபத்திய பயணநூல் இதது. கே.நல்லதம்பி: மைசூரில் பிறந்து, வளர்ந்தவர். தனியார் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவில் அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஏராளமான நூல்களை கன்னடத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்த்தவர். கர்நாடக சாகித்ய அகாதமி என்பது மாநிலஅரசின் நிதிஉதவியில் நடக்கும் நிறுவனம். பத்துகோடிக்கும் குறையாது ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு அரசிடம் இருந்து … Continue reading புதுவை என்னும் புத்துணர்வு – என்.சந்தியா ராணி- கன்னடத்தில் இருந்து தமிழில் கே.நல்லதம்பி:
நிரந்தரக் கணவன் – ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி – தமிழில் நர்மதா குப்புசாமி:
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி: உலகின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். Literary modernism, Existentialism, Psychology இவை மூன்றும் கலந்து மிக நுட்பமான படைப்புகளைப் படைத்தவர். இறந்து நூற்று நாற்பது ஆண்டுகள் முடிந்த பின்னும், இன்றும் உலகில் பரவலாக வாசிக்கப்படுபவர். இந்த நூல் இவரது குறுநாவல்களில் ஒன்று. நர்மதா குப்புசாமி: கவிஞர். எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர்.ஆரணியில் வசிக்கிறார். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இவரது கணவர். சின்ட்ரெல்லா நடனம் என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு. சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இது இவரது சமீபத்திய மொழிபெயப்பு. … Continue reading நிரந்தரக் கணவன் – ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி – தமிழில் நர்மதா குப்புசாமி:
மூன்று இரத்தத்துளிகள் – கணேஷ் ராம்:
ஆசிரியர் குறிப்பு: அண்ணாமலை பல்கலையின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர். இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல இலக்கிய இதழ்களில் வெளி வந்துள்ளன. அகுதாகவா மட்டுமன்றி, சொசெகி, பர்ரோஸ், போர்ஹே, பார்தல்மே ஆகியோரது சில படைப்புகளையும் மொழி பெயர்த்துள்ளார். சாதிக் ஹெதயாத்தின் இரண்டு கதைகள். முதல் கதை முழுவதும் சிம்பாலிஸம், இரண்டாவது கதை சர்ரியல் யுத்தி. நெருங்கிய நண்பனும் மணக்கப் போகும் பெண்ணும் செய்த துரோகம், பூனையை யாரோ (இவனுக்கு நேரடியாகக் கொல்வதில் விருப்பமில்லை) கொல்வதாக அடிக்கடி வருகிறது. அந்தப் … Continue reading மூன்று இரத்தத்துளிகள் – கணேஷ் ராம்:
சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகிட்டி.டி.ராமகிருஷ்ணன்- தமிழில் குறிஞ்சிவேலன்:
ட்டி.டி. ராமகிருஷ்ணன்: ரயில்வேயில் பணிபுரிந்து விருப்புஓய்வு பெற்றவர். தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் முதலாவதாக எழுதத் தொடங்கிய ராமகிருஷ்ணனின் ஆறு நாவல்கள் இதுவரை மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இது இவரது மூன்றாவது நாவல். குறிஞ்சிவேலன்: தமிழ்நாடு அரசுப்பணியில் இருந்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ராமகிருஷ்ணனின் முந்தைய ஐந்துநாவல்களையும், தற்போது ஆறாவது நாவலையும் மொழிபெயர்த்து வருபவர். "One day some gun will silence me … Continue reading சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகிட்டி.டி.ராமகிருஷ்ணன்- தமிழில் குறிஞ்சிவேலன்:
ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா- ட்டி.டி. இராமகிருஷ்ணன் – தமிழில் குறிஞ்சிவேலன்:
ட்டி.டி. ராமகிருஷ்ணன்: ரயில்வேயில் பணிபுரிந்து விருப்புஓய்வு பெற்றவர். தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் முதலாவதாக எழுதத் தொடங்கிய ராமகிருஷ்ணனின் ஆறு நாவல்கள் இதுவரை மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இது இவரது இரண்டாவது நாவல். குறிஞ்சிவேலன்: தமிழ்நாடு அரசுப்பணியில் இருந்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ராமகிருஷ்ணனின் முந்தைய ஐந்துநாவல்களையும், தற்போது ஆறாவது நாவலையும் மொழிபெயர்த்து வருபவர். Da Vinci Code கதை, இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக … Continue reading ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா- ட்டி.டி. இராமகிருஷ்ணன் – தமிழில் குறிஞ்சிவேலன்:
கடுந்துயருற்ற காதலர்கள் சதுர சாளரத்திற்கு இறுதிஅஞ்சலி செலுத்தி விட்டு முற்றத்திலிருந்து வெளியேறிய போதிலும்….- தக் ஷிலா ஸ்வர்ணமாலி – தமிழில் ரிஷான் ஷெரீப்:
தக் ஷிலா ஸ்வர்ணமாலி: இலங்கை, களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கள எழுத்தாளர். இடதுசாரி சமூகசெயற்பாட்டாளர். அந்திம காலத்தின் இறுதிநேசம் என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் பீடி என்ற நாவலின் மூலம் தமிழுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவலின் மொழிபெயர்ப்பு. ரிஷான் ஷெரிப்: சிங்களத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும், பல மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். மொழிபெயர்ப்புக்காக பல விருதுகளைப் பெற்றவர். சொந்தமாகவும் கவிதை, சிறுகதைத் தொகுப்பு, நாவல், கட்டுரைத் தொகுப்புகளை … Continue reading கடுந்துயருற்ற காதலர்கள் சதுர சாளரத்திற்கு இறுதிஅஞ்சலி செலுத்தி விட்டு முற்றத்திலிருந்து வெளியேறிய போதிலும்….- தக் ஷிலா ஸ்வர்ணமாலி – தமிழில் ரிஷான் ஷெரீப்:
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்- கே.ஆர். மீரா- தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்:
கே.ஆர். மீரா- சமகால இந்திய இலக்கியத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களில் ஒருவர். சாகித்ய அகாதமி உட்பட பல விருதுகளைப் பெற்றவர். பெண்ணிய சிந்தனைகளை இலக்கியமாக மாற்றத்தெரிந்த ரசவாதி. தேவிகாவின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்தக்குறுநாவல், சமீபத்தில் தமிழில் வெளியாகியிருக்கிறது. சிற்பி பாலசுப்பிரமணியம்: கவிஞர். மொழிபெயர்ப்பாளர். கல்வியாளர்.இலக்கிய இதழாசிரியர். சாகித்ய அகாதமி அமைப்புடன் இணைந்து பலவருடங்கள் பணியாற்றி வருபவர். இவரது மற்றொரு மொழிபெயர்ப்பான 'ஒரு சங்கீதம் போல' போலவே இந்த நூலும் பலகாலம் பேசப்படும் படைப்பாக அமையும். மீராவை … Continue reading அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்- கே.ஆர். மீரா- தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்: