காதலே காதலே!

கலா அக்கா எண்பதுகளில் நிச்சயமாக வித்தியாசமானவர். நண்பன் துரை அவரை அண்ணனின் காதலி என்று அடிக்கடி சொல்லியும் நான் பொருட்படுத்தவில்லை. அப்போதிருந்த ஆண்களில் தொண்ணூறு சதவீதம், பெண்கள் விஷயத்தில் பொய் சொல்வார்கள். அப்படியில்லை என்று நிரூபிக்கவே துரை என்னை கலா அக்கா வீட்டிற்குக் கூட்டிச் சென்றிருக்க வேண்டும்.கலா அக்கா வீட்டில், அவர், அம்மா, தங்கை வசந்தி ஆக மொத்தம் மூன்றுபேர். துரையின் அண்ணனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதால் கலா அக்கா அவருடைய நிரந்தரக் காதலியாக இருக்கத் … Continue reading காதலே காதலே!

Rogue Banker -7:

இப்போது இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. அப்போது வங்கிகளில் வர்க்கபேதம் இருந்தது. எழுத்தர்களுடன் அலுவலர்கள் ஒன்றுசேர மாட்டார்கள். அலுவலரும் மேலாளரும் இருவருமே Scale II என்றாலும் மேலாளர் அலுவலரைத் தள்ளி வைப்பார். Hierarchy என்பது வங்கியில் இருந்தது, ஆனால் 4.59க்கு போட்டது போட்டபடி மூட்டையைக்கட்டும் ( காசாளரால் அது முடியாது) எழுத்தரையோ, சரி சரி என்று பணிவாகச் சொல்லிவிட்டு வேலையை முடிக்காத அலுவலரையோ மேலாளரால் ஒன்றும் செய்வதற்கில்லை. எந்த ஊருக்குப் புதிதாகச் சென்றாலும், உடனேயே அருகாமையில் உள்ள வேறு … Continue reading Rogue Banker -7:

Rogue Banker – 6.

வங்கியில் முதலாவது சேர்ந்தது நாகப்பட்டினம் கிளையில். சேர்ந்து மூன்றாவது நாள் தான் தெரிந்தது, கிளையில் மூன்று பேச்சிலர்கள் ஒரேயிடத்தில் மதிய உணவுக்கு செல்வது. நானும் உங்களுடன் வருகிறேன் என்றதும், அவர்கள் முகத்தில் தயக்கம். அதில் ஒருவர் சற்றுநேரத்தில் சுதாரித்துக் கொண்டு, சரி வாருங்கள், ஆனால் முதல்நாள் நாங்கள் பேசுகிறோம், நீங்கள் எதுவும் பேச வேண்டாம் என்றார். பழைய, சிறிய வீட்டின் கூடமது. நெருக்கி உட்கார்ந்தால் நான்கு பேர் ஒருபுறம், மீதி நான்கு மறுபுறம் என எட்டுபேர் ஒரே … Continue reading Rogue Banker – 6.

Rogue Banker – 5

வங்கியில் கடனுக்கு ஜாமீன் (Guarantee) இடுபவர்கள் பெரும்பாலும் நம்புவது, கடனாளியிடம் பணம் இல்லாது போனால் தான் நம்மிடம் வருவார்கள் என்பது. கடனாளி கடனைக் கட்டவில்லை என்றால் இருவருமே பொறுப்பு. ஒருவேளை வங்கி கடனாளியை அணுகாமலேயே ஜாமீன் போட்டவரைக் கட்டச் சொல்லலாம். அவனிடம் கேட்காமலேயே என்னிடம் எப்படி வரமுடியும் என்று வங்கியைக் கேட்க முடியாது. வங்கி எப்போதும் யார் Vulnerable என்றே பார்க்கும். எண்பதுகளில் பெரும்பாலான வங்கிப் பயிற்சிக் கல்லூரிகளில் சொல்லப்படும் கேஸ் ஒன்று உண்டு. புகழ்பெற்ற கிரிக்கெட் … Continue reading Rogue Banker – 5

Rogue Banker – 4:

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊரை மாற்றிக் கொண்டே இருப்பதில் இருக்கும் பல சிக்கல்களுக்கு நடுவே மற்றுமொரு பிரச்சனை, புதிதாகச் சேரும் கிளையில் அங்கிருப்பவர்களின் நம்பிக்கையைப் பெறுவது. மேலாளராகக் கிளையில் எந்நேரமும் இருப்பது சாத்தியமில்லை. சில விஷயங்களை நான் ஒப்புக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு பரஸ்பர நம்பிக்கை வேண்டும். வேற்று மாநிலங்களில் பணியாற்றுகையில் அவர்களில் ஒருவனாவது இன்னும் சிரமம். நான் சேர்ந்த முதல்நாளிலேயே சொல்வது அலுவலகம் என்றில்லை உங்களது தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூடச் … Continue reading Rogue Banker – 4:

Rogue Banker -3:

ஆவணங்கள் வங்கியில் மிகவும் முக்கியம்.என்னுடைய முதல்நாள் வங்கிப்பயிற்சி வகுப்பில், நல்ல வாடிக்கையாளர், கெட்ட வாடிக்கையாளர் என்பதே கடன் கொடுப்பதில் கிடையாது. சூழ்நிலைகள் எல்லாவற்றையும் மாற்றவல்லது, எல்லாக் கடன் ஆவணங்களையும், அந்தக்கடன் வராக்கடன் ஆகப்போகிறது என்றால் எவ்வளவு கவனமாக தயாரிப்போமோ அப்படி செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுத்த பாலபாடத்தை வங்கியில் வேலைபார்த்த கடைசிநாள் வரைநான் மறக்கவேயில்லை. ஆனால் பலரும் கடன் ஆவணங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அன்றாட வேலைநெருக்கடிகளுக்கு நடுவில் கொடுப்பதில்லை. வழக்கறிஞர்கள் வாங்க வேண்டிய ஆவணங்கள் குறித்துக் … Continue reading Rogue Banker -3:

வந்ததில் எல்லாம் பொருளுண்டு

Rogue Banker -2 வங்கியின் P& L அக்கவுண்டை Debit செய்கையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பத்துரூபாய், இருபது ரூபாயெல்லாம் ஏமாற்றி வேலை போனவர்கள் உண்டு. சும்மா ஹாலில் இருக்கும் வாடிக்கையாளரை கேபினுக்குள் அழைத்து, உட்காருங்க காப்பி சாப்பிடலாம் என்று, அவருடன் தானும் சூடாகக் காப்பி சாப்பிட்டு விட்டு, Drinks supplied to Parties என்று கணக்கெழுதும் சாமர்த்தியசாலிகளும் உண்டு. ஆனால் இது அவர்களைப் பற்றிய பதிவல்ல. Chairmanக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரியிடம் நான் … Continue reading வந்ததில் எல்லாம் பொருளுண்டு

PRIZE

Margaret Atwood இதுவரை ஆறுமுறை புக்கர் பட்டியலில் வந்திருக்கிறார், இரண்டு முறை வென்றிருக்கிறார். சல்மான் ருஷ்டி ஐந்துமுறை பட்டியலில் இடம்பெற்று ஒருமுறை வென்றிருக்கிறார். நோபல் பரிசை வென்ற Kazuo Ishiguro நான்குமுறை புக்கர் பட்டியலில் இடம்பெற்று ஒருமுறை வென்றிருக்கிறார். Olga Tokarczuk போலந்தைச் சேர்ந்த எழுத்தாளர். நோபல் பரிசையும் புக்கர் பரிசையும் ஏற்கனவேயே வென்றவர். இவருடைய Magnum Opus ஆன The Books of Jacob இந்த ஆண்டு புக்கர் மற்றும் Women Fiction Award இரண்டிலும் … Continue reading PRIZE

மீறல்கள்

பத்மஜாவின் பதிவுகள் பல நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தன. குரோம்பேட்டை கிளை யூனியன் நடவடிக்கைகளுக்குப் பெயர் போனது. இரண்டுமுறை இருமினால் யூனியனுக்கும், தலைமை அலுவலகத்திற்கும் செய்தி போய்விடும். நான் கிளைக்குச் சென்று சில நாட்களிலேயே, Leather business செய்துவந்த வாடிக்கையாளரின் மொத்த குடும்பமும் விபத்தில் இறக்க, தப்பிப்பிழைத்தது இருபது வயதான பெண்ணும், பெண்ணின் கணவரும். மாதாந்திர விலக்கு கோயிலுக்குச் சென்ற குடும்பத்துடன் சேராமல் அவரைக் காப்பாற்றியது. அவர் வீட்டிற்கு சென்றால், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பூவும், குங்குமமும் … Continue reading மீறல்கள்

இலக்கியம்

எம்.ஜி.ஆர் படங்களின் வெற்றிக்கு, அத்திரைப்படங்களில் வரும் பெண்கள், தங்களையே விரும்புகிறார்கள், தங்களையே கட்டி அணைக்கிறார்கள் என்று ஆண் ரசிகர்களை நம்பவைத்தது முக்கிய காரணம். பெண்கள் எப்படி நம்பினார்கள் என்பதை ஜெயகாந்தன் ஒரு கதையில் (சினிமாவுக்குப் போன சித்தாளு) சொல்லி இருப்பார். இலக்கியத்தையும் அதையும் ஒப்பிடக்கூடாது. ஆனால் அதன் மையக்கதாபாத்திரங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டிலும் பொதுமையானது. சி.மோகனின் கமலியில், கமலியை யாரும் தானாக நினைக்க வாய்ப்பில்லாத, மொழிநடை, சம்பவக்கோர்வை, கதைசொல்லல், கமலியை அருவருப்பாகப் பார்க்க வைத்தது. செங்கம்மாவைப் … Continue reading இலக்கியம்