ஆசிரியர் குறிப்பு: வடமராட்சி, பருத்தித்துறை, மேலைப்புலோலி, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது இலண்டனில் வசிக்கிறார். ஏற்கனவே இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பு. மாமியார்- மருமகள் உறவு என்பது love-hate relationship. Hate எத்தனை சதவீதம் என்பதைப் பொறுத்தே அவர்கள் பேசுவது இருக்கும். மேலைநாடுகளில் கூட இந்த உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் கிடையாது. முதன்முறையாக, சந்திரா, தனது மாமியார் கூறிய கதைகளை நினைவுறுத்திப் புத்தகமாக்கியதன் மூலம் அந்த உறவின் … Continue reading மாமி சொன்ன கதைகள் – சந்திரா இரவீந்திரன்:
பெருக்கு – அலறி:
ஆசிரியர் குறிப்பு: கிழக்கிலங்கையின் மருதமுனையைச் சேர்ந்தவர். சட்டத்தில் இளமானிப் பட்டமும்,மனித உரிமைகள், பொதுச் சுகாதாரம், உளவளத்துணை போன்றவற்றில் டிப்ளமோ பட்டமும் பெற்ற சட்டதரணியாவார். ஏற்கனவே இவரது ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது ஆறாவது தொகுப்பு. 'அற்றைத் திங்களின்' பாரி மகளிரின் சோகம் இந்தக் கவிதையிலும் பிரதிபலிக்கிறது. சிதிலங்கள் எப்போதும் நமக்கு சொந்தமில்லாதவற்றில் நேரும் போதும் வருத்தத்தை ஏற்படுத்துபவை. கட்டிடங்கள், ஆறு, குளம், நாடு…… ஏன் பெண்ணாக இருந்தால் கூட சரி இனம்புரியாத சோகம் மேலெழுகிறது. " … Continue reading பெருக்கு – அலறி:
மரமல்லி- பொன்.விமலா:
ஆசிரியர் குறிப்பு: ராணிப்பேட்டை, அவரைக்கரை கிராமத்தில் பிறந்தவர். பத்திரிகையாளர். ஊடகவியலாளர். இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. பொன்.விமலாவின் இந்தத் தொகுப்பை வாசித்ததும், முதலில் தோன்றியது, இதைத் தான் எழுத வேண்டும் என்ற, கூண்டுக்குள் மாட்டிக் கொள்ளாத, தயக்கமில்லாத எழுத்து. அதற்கேற்றாற்போல் இந்த மொழிநடையில் இருக்கும் வேகம். தங்கு தடையில்லாத மொழிநடை. நகரத்துக் கதைகளும், கிராமத்துக் கதைகளும் அதே Aurhenticityயுடன் இருக்கின்றன. பலிபீடம், தீட்டு, டிங் டாங் பெல், ரெய்ன் கிஸ் ஆகிய கதைகள் தொகுப்பில் எனக்குப் … Continue reading மரமல்லி- பொன்.விமலா:
அசகவ தாளம் – பெரு விஷ்ணுகுமார்:
ஆசிரியர் குறிப்பு: பழனியைச் சேர்ந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டதாரி. இதற்கு முன் " ழ என்ற பாதையில் நடப்பவன்' என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சிறிய சிக்கல்களில் மனஅழுத்தம் பெறுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களது வாழ்க்கை முழுவதும் பேரிடர் அவர்கள் இருக்கும் தெருவிற்குக்கூட வரப்போவதில்லை. misfortunes never come singly என்பதெல்லாம் எப்போதும் அடிதாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பவர்களுக்கு மட்டும். " எதையும் நிரூபிக்காமல் வெறுமனேகிடப்பினும் காலம் எங்கேனும்கூட்டித்தான் செல்கிறதுதற்போது இந்த … Continue reading அசகவ தாளம் – பெரு விஷ்ணுகுமார்:
A Spell Of Good Things – Ayobami Adibayo:
Ayobami, Lagos, நைஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய முதல் நாவலான Stay with Me ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாது, வேறு நாடுகளிலும் விருதுகளை வென்றது.இவரது இந்த இரண்டாவது நாவல் பிப்ரவரி 2023ல் வெளியானது. பள்ளிக்கு பணம் கட்டமுடியாது, பிச்சை எடுத்து, ஒரு குழந்தையை மட்டும் படிக்க வைக்க முடிந்த குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு வயதுப்பையன், பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, டாக்டராக வேலை பார்க்கும், முப்பதைத் தொடும் வயதில், காதலித்தவனை மணக்கப் போகும் பெண்,நைஜீரியாவில் கவர்னர் பதவிக்குத் தேர்தலும், குண்டர்களின் … Continue reading A Spell Of Good Things – Ayobami Adibayo:
Wuthering Heights – Emily Bronte- Literary Classics6/100:
கவிஞர், ஆசிரியர், நாவலாசிரியர். எமிலி (1818 -48) ஆங்கிலகிராமம் ஒன்றில் கட்டுப்பாடான சூழ்நிலையில் வளர்ந்தார். அவர் வளர்ந்த சூழலே இந்த நாவலின் கதைக்களம் ஆகும். இவருடைய இரு சகோதரிகள் சார்லோட் ப்ரோன்ட் மற்றும் அனீ ப்ரோன்ட் இவரை விட பிரபலமானவர்கள். இந்த ஒரு நாவலே இவர் எழுதியது. 1847ல் இந்த நாவல் வெளியான போது, இவரது சித்தசுவாதீனம் குறித்த சந்தேகத்தைத் தெரிவித்தவரும் இருந்தார்கள். இவர் இறந்தபிறகு இவரது சகோதரி சார்லோட் இவருடைய கவிதைகளை சீரமைத்த பின் விமர்சனங்கள் … Continue reading Wuthering Heights – Emily Bronte- Literary Classics6/100:
LTTE மூர்த்தி அழைக்கிறார் – கதை- ஏ.வெங்கடேஷ மூர்த்தி – விவரிப்பு சிவகுமார் மாவலி- கன்னடத்திலிருந்து தமிழில் கே. நல்லதம்பி:
சிவகுமார் மாவலி, ஷிவமோக்கா, சொரடாவின் மாவலி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலப் பேராசிரியர். இரண்டு சிறுகதைத்தொகுப்புகள், பல இலக்கியக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கே.நல்லதம்பி: தனியார் கம்பெனியில் அகில இந்திய மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழக வாசகர்களுக்குப் பெரிதும் அறிமுகமானவர். நூலின் ஆரம்பத்தில் 25 படைப்புகள் கன்னடத்திலிருந்து தமிழுக்கும், 15 தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்த்திருக்கிறார் என்று குறிப்பு சொல்கிறது. இதை எழுதும் வேளையில் நிச்சயம் இந்த எண்ணிக்கை மாறியிருக்கும். Right man in … Continue reading LTTE மூர்த்தி அழைக்கிறார் – கதை- ஏ.வெங்கடேஷ மூர்த்தி – விவரிப்பு சிவகுமார் மாவலி- கன்னடத்திலிருந்து தமிழில் கே. நல்லதம்பி:
ஜூடாஸ் மரம் – மலர்விழி:
ஆசிரியர் குறிப்பு: கோவையில் பிறந்து, வளர்ந்தவர். பெங்களூரில் வசிக்கிறார். கணினிப் பயன்பாட்டில் முதுகலைப்பட்டம் பெற்று ஐடித்துறையில் பணியாற்றியவர். இவரது ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு மொழிபெயர்ப்பு நூலும் ஏற்கனவே வெளிவந்தவை. இது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சந்திரோதயம் படப்பாடலில் ஒரு Stanza "இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ" என்று ஆரம்பிக்கும். மொத்தப்பாராவும் தணிக்கை செய்யப்பட்டு "மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ" என்று காமெடிப் பாடலாக மாறியிருக்கும். அதற்கு ஏழு வருடங்கள் முன்பே வந்த அம்பிகாபதி பாடல் … Continue reading ஜூடாஸ் மரம் – மலர்விழி:
கபர் – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார்:
கே.ஆர்.மீரா மீரா தற்போதுஎழுதிக்கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர். இவரது நான்கு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கேரளாவின் Major Literary awards எல்லாவற்றையும் வென்றிருக்கிறார். ஆராச்சார் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும், பிற படைப்புகளுக்காக மூன்று முறை கேரள சாகித்யஅகாதமி விருதும் வாங்கி இருக்கிறார். மோ.செந்தில்குமார்: தமிழ் பேராசிரியர். மொழிபெயர்ப்பாளர். பெயல் இதழின் ஆசிரியர். ஆராச்சாரில் தொடங்கி மீராவின் படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார். பொதுவாக ஒருமொழியில் வாசித்ததை அடுத்த … Continue reading கபர் – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார்:
காலடித் தடங்கள் – சுபி:
ஆசிரியர் குறிப்பு: பள்ளி இறுதியில் கவிதைகள் எழுத ஆரம்பித்த சுபியின், முதல் தொகுப்பான 'காலடித் தடங்கள்' கிண்டில் வெளியீடாக வந்து, கடந்த ஜூலையில் வெளிவந்த "தேம்பூங்கட்டி', ' நோமென் நெஞ்சே' தொகுப்புகளுடன் இணைந்து மூன்றாவது அச்சுப்பிரதியாக வெளிவந்துள்ளது. தமிழில், பிரபல பதிப்பகங்கள் தவிர்த்து, மற்ற பதிப்பக நூல்களை வாங்க நினைப்பவர்களுக்கு, Online link பெரும்பாலும் இருப்பதில்லை. தொலைபேசி எண் உபயோகத்தில் இருப்பதில்லை அல்லது அவர்கள் எடுப்பதில்லை. அதே போல் புத்தக வெளியீட்டுக்கு வரும் வாழ்த்துகள் வேறு, புத்தகங்கள் … Continue reading காலடித் தடங்கள் – சுபி: