போர்க்கலை - யுவன் சந்திரசேகர்: ஒன்றைச் சொல்கையில் சிந்தனை மாறி மற்றொன்றுக்குச் சென்று Jump cut techniqueல் கதைகள் எழுதுவது யுவன் சந்திரசேகரின் வழக்கம். எனக்கு அவர் கதைகளை வாசிப்பதில் பிடித்த அம்சமும் அது தான். ஒரு மறைந்த நண்பனின் நினைவில், இருவரும் எவ்வளவு வேறுபட்டு இருந்தார்கள் என்பதற்குப் போய், கடைசியாக அவன் கொடுத்த புத்தகம் குறித்த சிந்தனை, பின் கடைசியாய் வாசித்த புத்தகத்தில் மையம்கொண்டு நிற்கிறது. கடைசியாக வாசித்த புத்தகம், கற்பனை தன் வரலாறு புத்தகம். … Continue reading காலச்சுவடு ஏப்ரல் 2023 சிறுகதை:
காலச்சுவடு பிப்ரவரி 2023 சிறுகதைகள்:
வெற்றுப் பூந்தட்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு - சுஸந்த மூனமல்பே - சிங்களத்தில் இருந்து தமிழுக்கு ரிஷான் ஷெரீப்: ஐந்துவிளக்குகளின் கதை என்று சமீபத்தில் வெளிவந்த தொகுப்பின் கதைகளில் ஒன்று இது. X videosஆ பார்ப்பதே இல்லையே என்று சொல்லும் தமிழ்ச்சூழலில் இருந்து விலகிய கதை இது. கள்ள உறவுகளை கானொலியாக (பெரும்பாலும் பெண்ணுக்குத் தெரியாமல்) எடுத்து வைத்துக் கொள்வதை ஒரு பதக்கம் போல் எண்ணுவர்கள் பலர். அப்பாவி முகங்கள் கடைசியில் சந்தி சிரிக்கும். இந்தப் பின்னணியில், … Continue reading காலச்சுவடு பிப்ரவரி 2023 சிறுகதைகள்:
காலச்சுவடு செப்டம்பர் 2022 சிறுகதை:
நல்ல துப்பாக்கி - அ.முத்துலிங்கம்: தமிழில் எழுதப்பட்ட கதையில் பாகிஸ்தானியர்கள் வருவதும், நம்மை அவர்கள் எதிரிகள் என்பதும் கனவில் வரும் காட்சிகள் போல் தோற்றமளிக்கின்றன.பெஷாவர் நகரம் குறித்த அறிமுகம், பஞ்சு வியாபாரம், காபூல் கலவரம் வியாபாரத்தைப் பாதிப்பது என்று செல்லும் கதையில், மற்றொன்று இடையில் புகுந்து இதைக் குறித்து முற்றிலும் மறக்க வைத்துப்பின் கடைசியில் நினைவுபடுத்துகிறது. காஷ்மீர் விடுதலைக்காகப் போராடுவதே வாழ்க்கையின் இலட்சியம் என்று நினைக்கும் பாகிஸ்தானியர் இன்னும் இருக்கிறார்கள். அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். தற்காலிக வேலை … Continue reading காலச்சுவடு செப்டம்பர் 2022 சிறுகதை:
காலச்சுவடு ஜூலை 2022 சிறுகதைகள்:
நரை - மாஜிதா: சொன்னதையே திருப்பிச் சொல்வது என்றாலும் பரவாயில்லை. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எழுதுகையில் அவர்களை அறியாமலேயே தமிழின் புனைவெல்லையை விரிவுபடுத்துகிறார்கள். நம் கலாச்சாரத்தில் ஊறிய மனம் வேறு கலாச்சாரத்திற்குள் புகும்போது ஏற்படும் அதிர்ச்சிகள் தவிர்க்க முடியாதவை. அமெரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்கர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், கொரியர்கள் இவற்றை நிறையவே தங்கள் கதைகளில் பதிவிட்டிருக்கிறார்கள். மாஜிதாவின் இந்தக் கதை லண்டனில் நடக்கும் கதை, இவர் இதுவரை எழுதியவற்றில் எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று. இந்தக் கதையில் பல உள்முடிச்சுகள். … Continue reading காலச்சுவடு ஜூலை 2022 சிறுகதைகள்:
காலச்சுவடு ஜூன் 2022 சிறுகதைகள்:
அவுரி - சத்யஜித்ரே- தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி: இந்தக்கதையை ஏற்கனவே தமிழில் படித்த நினைவிருக்கிறது. சத்யஜித் ரேயின் Horror stories, Poeவின் Styleல், ஆனால் இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும். பெங்காலிகள் யாராக இருந்தாலும், என்ன பதவியில் இருந்தாலும் தாகூரை சிலாகிக்காமல் இருக்க மாட்டார்கள். அதனால் உலக அளவில் அவர் புகழ்பெற முடிந்தது. இந்தக் கதையின் ஒரு பகுதி Pure Horror. ஒரு மாளிகையில் தங்கியவுடன், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு ஆங்கிலேயனின் கடைசிநாட்களை revisit செய்ய … Continue reading காலச்சுவடு ஜூன் 2022 சிறுகதைகள்:
காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
கிழிவு -. கலாமோகன்: கலாமோகனின் கதைகள் Fantasyக்கு கதை வடிவம் கொடுக்க முயல்பவை. நான் வாசித்த அநேக கதைகளில் காணும் பெண்களை எல்லாம் கூடும் வயதான பிம்பம் ஒன்று வந்து போகும். அவரது எழுத்தில் அலைபாயும் உணர்வுகளைக் கடத்த முயலும் சற்றே பிறழ்ந்த மனம் இந்தக் கதையிலும் வருகின்றது. சொந்த நாட்டில் அகதியாக நடத்தப்படும் நிலை யாருக்கும் வரக்கூடாது. சிங்களவரும் தமிழரும் ஒருவரை ஒருவர் பார்த்து பயப்படுகின்றனர், ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். எல்லாம் OK. வாசித்து அந்த நேரத்தில் … Continue reading காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
ராஜேஷீம் மரியாவும் - சக்கரியா- தமிழில் சுகுமாரன்: மார்ச் மாதத்தில் பாஷா போஷிணியில் வந்த கதை அதற்குள் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகளை பகடி செய்து எழுதப்பட்ட கதை. சிறுவயது முதல் பழகிய இரண்டு காதலர்களில், காதலி டில்லிக்கு மேற்படிப்புக்கு சென்று வந்து, போஸ்டர் ஒட்டுகிற, கோஷம் போடுகிற பழைய கம்யூனிஸ்டிலிருந்து மாறி புதிய கம்யூனிஸ்டுகள் ஆக வேண்டும் என்கிறாள். இரண்டு குடும்பத்தின் மதம் குறுக்கே வரவில்லை, வேறுபட்ட அரசியல் கட்சிகள் குறுக்கே வரவில்லை, சிந்தனை மாற்றம் குறுக்கே … Continue reading காலச்சுவடு ஏப்ரல் 2022 சிறுகதைகள்:
காலச்சுவடு மார்ச் 2022 சிறுகதைகள்:
சங்கிலி - யுவன் சந்திரசேகர்: பேருந்துக்குப் பணமில்லாமல் ஆற்றில் பிணம்போல் மிதந்து சென்று வேலைக்குப் போவது, ஞாபகங்களின் கனத்தில் கூன் விழுவது, முனியாண்டிக்கு நேர்ந்து விட்ட காளை, இனி எங்கை பார்க்கப்போறோம்என்பது போல் யுவன் சந்திரசேகரின் வழக்கமான வரிகளைத் தாண்டிய அர்த்தங்கள், கதையைத் தொடர விடாமல் தொந்தரவு செய்கின்றன. ஞாபகங்கள் ஒன்றை ஒன்று நான் முந்தி என தள்ளிவிட்டு வருகின்றன. அறுபது வயதில் அசைபோடுகையில், நிறைய செயல்களுக்குஅர்த்தமில்லாது போகிறது, சிலவற்றுக்குப் புதிய அர்த்தம் தோன்றுகிறது. Nostalgia தான் … Continue reading காலச்சுவடு மார்ச் 2022 சிறுகதைகள்:
காலச்சுவடு டிசம்பர் 2020 கதைகள்
செல்லப்பன்- சுந்தரராமசாமி: சு.ரா இருந்தபோது அவரது மொத்தக் கதைகள் தொகுப்பிலிருந்து, பலவீனமான கதைகள் என்று நான்கு கதைகளை விலக்குகிறார். அதில் இதுவும் ஒன்று என்று குறிப்பு சொல்கிறது. தப்புத்தாளங்கள் திரைப்படத்தின் கதை தான் இதுவும். ஆனால் இது கல்கியில் 1959லேயே வெளிவந்து விட்டது. சு.ராவின் ஆரம்பகால கதைகள் வேறுவிதமாக இருக்கும். புளியமரத்தின் கதைக்கும், ஜே ஜே சில குறிப்புகளுக்குமே கடலளவு வித்தியாசம். என்றாலும் இதற்கு முன் வெளிவந்த பிரசாதம், சன்னல் போன்ற கதைகளும் கூட அழுத்தமானவை. சு.ராவின் … Continue reading காலச்சுவடு டிசம்பர் 2020 கதைகள்