தமிழில் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் என்ற இரண்டு வடிவங்களிலும் சிறந்த பங்களிப்பை அளித்தவர்கள் என்று பட்டியலிட்டால், விரல்விட்டு எண்ணி விடலாம். சா.கந்தசாமி அதிகம் ஆரவாரமின்றித் தன்னுடைய தடங்களைத் தமிழிலக்கியப் பரப்பில் பதித்துச் சென்றவர். கதைகளல்லாத கதைகள் என்று சா.கந்தசாமியின் சிறுகதைகளைச் சொல்வார்கள். பெரும்பாலான கதைகளை பின்னாளில் அவர் அப்படி எழுதியிருந்தாலும், 'தக்கையின் மீது நான்கு கண்கள்' போன்ற சிறந்த கதையம்சம் கொண்ட சிறுகதைகளையும் அவர் அதிகமாகவே எழுதியிருக்கிறார். சா.கந்தசாமியின் முக்கியமான நாவல்களைப் பட்டியலிடுவோர் தவறாமல் குறிப்பிடுபவை, சாயாவனம், … Continue reading காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல் பதிப்பிற்கான முன்னுரை: