அறை – தேவிலிங்கம்:

கு.ப.ராவின் ஆற்றாமை சிறுகதையை யார் மறக்க முடியும். தனக்கு மறுக்கப்பட்ட காமம் அடுத்தவளுக்குக் கிடைப்பதைப் பார்ப்பதில் ஏற்படும் பொறாமை தான் இரண்டு கதைகளையும் இணைக்கும் மையச்சங்கிலி. தேவி, கூட்டுக்குடும்பத்தில் கொழுந்தன் மேல் கொள்ளும் உரிமையை இந்தக் கதையில் கொண்டு வந்திருக்கிறார். வயது அதிகமுள்ள அண்ணிகளின் மூத்தபிள்ளைகளாகிப் போகிறார்கள் கொழுந்தர்கள். வித்தியாசம் குறைகையில் அந்த உறவில் ஒரு சீண்டல் இருப்பது இயல்பு. பெரும்பாலும் சீண்டலுடன் நிறுத்திக் கொள்ளப்படும். நுட்பமான உறவு அது. காமம் ஒடுக்கப்படுகையில் பெண்களின் எதிர்வினை பலவாக … Continue reading அறை – தேவிலிங்கம்:

நெய்தல் நறுவீ – தேவி லிங்கம்:

ஆசிரியர் குறிப்பு: வேதாரண்யத்தில் வசிப்பவர். முகநூலில் தொடர்ந்து கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது. பிப்ரவரி 2022ல் வெளியாகியிருக்கிறது. அன்பை, குழந்தைமையுடன் கூடிய ஆச்சரியத்தை, மனிதர்கள் மேலிருக்கும் நம்பிக்கையை, தனக்குத்தானே அல்லது எதிரிருப்பவருடன் நடத்தும் உரையாடல்களேதேவிலிங்கத்தின் கவிதைகள். நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் விசயங்களை, எளிய வார்த்தைகளில் கோர்வையாகச் சொல்லி இருக்கிறார். விரைவில் நல்லது நடக்கும் என்று, கம்பின் நுனியில் கட்டப்பட்ட கேரட்டைத் தின்னும் ஆசையில் குதிரையின் ஓட்டமாக வாழ்க்கை நகர்கிறது. அறியாத ஒன்றின் … Continue reading நெய்தல் நறுவீ – தேவி லிங்கம்: