அம்புலிமாமா, காமிக்ஸ்க்குப் பிறகு நேரடியாக சமூகநாவலுக்கு வந்து விட்டேன்.வரதராசனார், நா.பா படித்து வளர்பவர்கள், பெரியவராகி, பத்தரைமாற்று தங்கமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். நான் பித்தளையாகக்கூட ஆகவில்லை. பின்னர் ஆரம்பித்தது தான் தமிழ்திரில்லர் படிப்பது. புஷ்பா தங்கதுரையின் திரில்லர் கூடப் படித்திருக்கிறேன். சுஜாதா தான் இந்த உலகத்தில் சிறந்த திரில்லர் எழுதுகிறார் என்று திடமாக நம்பிய காலமது. S.S.L.C முடித்த பிறகே Chaseல் ஆங்கில வாசிப்புத் தொடங்கியது. அநேகமாக எல்லா Chase booksம் படித்ததாக நினைவு. ஒரு கணக்கிற்குச் … Continue reading திரில்லர் நாவல்கள்: