இணைய இதழ்களின் வளர்ச்சிக்குப் பிறகு, தமிழில் பெண்கள் எழுதுவது அதிகரித்திருக்கிறது. தேவியில், மங்கையர்மலரில் என் கதை வந்திருக்கிறது என்று உற்சாகம் கொப்பளிக்கும் குரல்கள் குறைந்து, அந்த இதழில் நான் எழுதிய கதையை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன் என்று கேட்கும் குரல்கள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோருக்கும் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. கூச்சம் காரணமாகப் பல கதைகள் சொல்லப்படாமல் போகின்றன. தமிழில் சொல்லப்பட வேண்டிய கதைகள் சொல்லப்படாமலும், எல்லாவற்றையும் சொல்லி முடித்த ஆண்கள் இடைவிடாது கதைகளில் தொணதொணத்துக் கொண்டிருப்பதும் சமீபத்தில் … Continue reading சிறுகதைகள்